பக்கம் எண் :

காமம் சாலா இளமையோள் வயின் சூ.53419

நச்சினார்க்கினியர்
 

53. காமம்...................குறிப்பே
 

இது     முன்னர்   அகத்திணை  ஏழென  நிறீஇ,  அவற்றுள் நான்கற்கு நிலங்கூறிப் பாலையும் நான்கு
நிலத்தும்  வருமென்று  கூறி’  உரிப்பொருளல்லாக்   கைக்கிளை  பெருந்திணையும்  அந்நிலத்து  மயங்கும்
மயக்கமுங்  கூறிக்  கருப்பொருட்  பகுதியும் கூறிப், பின்னும் பாலைப்  பொருளாகிய  பிரிவெல்லாங்  கூறி,
அப்பகுதியாகிய  கொண்டுதலைக்  கழிவின்கட்   கண்ட  கூற்றுப்  பகுதியுங்  அதனோடொத்த இலக்கணம்
பற்றி  முல்லை முதலியவற்றிற்கு  மரபுகூறி,  எல்லாத்திணைக்கும்  உவமம்பற்றிப்பொருள்  அறியப்படுதலின்
அவ்வுவமப்   பகுதியுங்    கூறி,    இனிக்கைக்கிளையும்    பெருந்திணையும்    இப்பெற்றிய   வென்பார்,
இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார்.
 

(இ-ள்)     காமம்    சாலா   இளமையோள்    வயின்    -    காமக்குறிப்பிற்கு   அமைதியில்லாத
இளமைப்பிராயத்தாள்  ஒருத்தி கண்ணே;  ஏமஞ்சாலா  இடும்பை  எய்தி  -  ஒரு தலைவன் இவள் எனக்கு
மனைக்கிழத்தியாக  யான்   கோடல்   வேண்டுமெனக்  கருதி  மருந்து  பிறிதில்லாப்  பெருந்துய   ரெய்தி;
நன்மையும்  தீமையும்  என்று  இருதிறத்தால்  தன்னொடும்   அவளொடும்   தருக்கிய  புணர்த்து - தனது
நன்மையும்  அவளது  தீங்கையு  மென்கிற  இரண்டு  கூற்றான்  மிகப்பெருக்கிய சொற்களைத் தன்னோடும்
அவளோடுங்    கூட்டிச்சொல்லி;    சொல்   எதிர்    பெறாஅன்  பின்னுந்தானே  சொல்லி  இன்புறுதல்
புல்லித்தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - பொருந்தித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பு என்றவாறு.
 

அவளுந்    தமருந்   தீங்குசெய்தாராக  அவளோடு  தீங்கைப்  புணர்த்துத்,  தான்  ஏதஞ்  செய்யாது
தீங்குபட்டானாகத்  தன்னோடு  நன்மையைப்   புணர்த்தும்   என   நிரனிறையாக  உரைக்க. இருதிறத்தாற்
றருக்கிய எனக்கூட்டுக.
 

“வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோள்
பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற்
காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற்