பக்கம் எண் :

காமம் சாலா இளமையோள் வயின் சூ.53421

மருளின் மடநோக்கி நின்றோழி யென்னை
யருளியல் வேண்டுவல் யான்.”

(கலி-61)
 

எனவரும்.
 

இது  கைகோளிரண்டினுங் கூறத்தகாத  வாய்பாட்டாற்1  கூறலிற் கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற்
சொல்லியின்புறுந்   தலைவன்றன்  குறிப்பின்  நிகழ்ந்தது   புறத்தார்க்குப்   புலனாகாதென்பதூஉம் அகத்து
நிகழ்ச்சி  அறியும்   மனைவியர்க்காயின்  அது  புலனாமென்பதூஉங்  கொள்க.   அது  கிழவோன்  பிறள்
குணம் (தொல்-பொ-பொரு 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுதும்.
 

காமஞ்     சாலா  இளமையோன்  வயினெனப் பொதுப்படக் கூறிய அதனால் வினைவல பாங்காயினார்
கண்ணும்  இவ்விதி  கொள்க  இதனைக்  ‘காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து  என்னும் (a) முல்லைக்
கலியான் உணர்க. (50)
 

பாரதியார்:
 

53. காமம் ... ... ... ... ... குறிப்பே
 

கருத்து:  இது  அகத்திணை  ஏழனுள்  மேல்   நடுவணைந்திணைக்குரிய  இயல்புகள் கூறியபின் எஞ்சி
நின்ற இரண்டில் கைக்கிளை இயல்பை விளக்குகிறது.
 

பொருள்:     காமஞ்சாலா   இளமையோள்   வயின்-காதற்   செவ்விகனியும்  பருவம்  வராத  சிறுமி
ஒருத்தியிடம்;  ஏமஞ்சாலா  இடும்பை  எய்தி-ஒரு  தலைவன் தனக்கு மருந்தும் பிறிதில்லாப் பெருந்துயராம்
காதனோய்  கொண்டு;   நன்மையும்   தீமையும்   என்றிரு  திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய
புணர்த்து - பட்டாங்குப்   புகழ்தலும்   (ஆற்றாமையால்) பழிப்பது போலப் புகழ்தலுமாகிய இருவகையானும்
தன்பாலும் அச்சிறுமிபாலும் வீறுபெறத் தக்கன சார்த்தி; சொல்லெதிர் பெறாஅன்
 


1 கூறத்தகாதவாய்பாடு;  இளமையாண்  உணராதாய்’.  ‘நுமர்தவறு  இல்  என்பாய்’. மடலேறிநிறுக்குவன்’,
‘இவள்  தந்தை  விழுப்பொருள்  கொடுக்கும் யாதுநீ வேண்டியது’, பொருள் வேண்டும் புன்கண்மையீன்
டில்லை’ என்பன போல்வன