பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த நிறைஅழி காமநோய் நீந்தி அறையுற்ற உப்பியல் பாவை உறையுற் றதுபோல உக்கு விடும்என் உயிர்; |
பூளை பொலமலர் ஆவிரை வேய்வென்ற தோளாள் எமக்கீத்த பூ; உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த நெய்யுண் மெழுகின நிலையாது பைபயத் தேயும் அளித்தென் னுயிர்; |
இளையாரும் ஏதிலவரும்; உளையான் உற்ற துசாவுந் துணை; |
என்றியான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின் துன்பத்தில் துணையாய மடல்இனி இவட்பெற இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள் அன்புற்று அடங்கருந் தோற்றத்து அருந்தவ முயன்றோர்தம் உடம்பொழித்து உயருல கினிதுபெற் றாங்கே.” |
(கலி-நெய்-21) |
இளமை தீர்திறமாவது; இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது, அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகள் இளையனாதலும், இவ்விரு வரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என. |
“உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கு புனலூரன் மூப்பு.”1 |
(புறப்-இருபாற்பெருந்திணை-14) |
1 புனலூரன்மூப்பு முறுவலார்க்குக்களிசெய்யும்’ என்பதில் புனலூரன் மூப்பு என்றது தலைவன் இளமைதீர்திறம். |