கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி ஆயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை ஆயின் தவிருமென் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ; |
மையில் சுடரே மலைசேர்தி நீயாயின் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகத் கதிர்சில தாராய்என் தொய்யில் சிறைத்தானை தேர்கு; |
சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை நயந்து நலஞ்சிதைத் தான்; |
மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற; |
நோயரி ஆகச் சுடினுஞ் சுழற்றியென் ஆயிதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கௌவையும் என்றிவ் வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு; எனப்பாடி, |
இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தவென் றெண்ணி எல்லிரா |
நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங் கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து.” |
(கலி-நெய்-25) |
மிக்க காமத்துமிடலாவது ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது. அஃதாவது வற்புறுத்துந் துணையின்றிச் |