பக்கம் எண் :

ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54433

ருயர்நிலைப் யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே.”

(கலி-139)
 

இஃது ஏறிய மடற் றிறம்.
 

“உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்கலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி
னக்குளுத்துப் புல்லலு மாற்றே னறாளீமோ
பக்கத்துப் புல்லல் சிறிது.”

(கலி-94)
 

இதனுட், கொக்குரித்தன்ன வென்பதனாற் றோல் திரைந்தமை கூறலின் இளமைதீர்1 திறமாயிற்று.
 

“உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்கள் ளனைத்தாய்ப் படுகளி செய்யு
முழங்கு புனலூரன் மூப்பு”
 

“அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - கரும்போ
டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ
முதிரு முலையாண் மியக்கு.”
 

என்பனவும் அது.
 

“பிரிவுண்ட     புணர்ச்சி”  என்னும்  (25)  நெய்தற்பாட்டுக் காமத்து மிகுதிறம் இதனைப் பொருளியலுட்
(42)  காட்டுதும்.  ஆண்டோதும்  இலக்கணங்களுந்   தோன்ற   இதனுட்  டெளிந்து கூறுவனவும் ஆண்டுக்
காண்க.
 

“ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று
மேவினு மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினெ னெல்லா
 


1 பெண்பாற்கு இளமை தீர்திறம்.