பக்கம் எண் :

434தொல்காப்பியம் - உரைவளம்

தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று.

(கலி-92)
 

இது மிக்க காமத்துமிடல்.
 

செப்பிய   நான்கெனவே  செப்பாதனவாய் அத்துணைக் கந்தருவமாகக்1 கூறுகின்ற “பின்னர் நான்கும்2
பெருந்திணை  பெறும்”
 (தொல்-பொ-கள-14)   என்ற   பெருந்திணையும்  நான்கு  உளதென்று உணர்க.
குறிப்பென்றதனான்    அந்நான்கும்    பெருந்திணைக்குச்    சிறந்தன   வெனவும்   ஈண்டுக்   கூறியன
கைக்கிளைக்குச் சிறந்தனவெனவுங் கொள்க.
 

பாரதியார்
 

54 ஏறிய... ... ... ... குறிப்பே
 

கருத்து:  இது,  நிறுத்தமுறையானே,  எழுதிணைகளுள்  இறுதியாக  எஞ்சி  நின்ற பெருந்திணை இயல்
கூறுகின்றது.
  

பொருள்:     ஏறிய  மடற்றிறம்-மடலேறுவேன்  எனக் கூறுதலோடமையாது. தலைவன் மடலேறுதலும்;
இளமை  தீர்திறம்  இன்பம்   துய்த்தற்கு   உரிய   பருவம்  கழிந்த  பிறகு எழும் விழைச்சு விருப்பமும்3,
தேறுதலொழிந்த  காமத்து  மிகுதிறம்  தெளிய  வொண்ணாமல்  அறிவழிக்கும் கழி காமமும்; மிக்க காமத்து
மிடலொடு   தொகைஇ-கரை   கடந்த   காமத்தால்  விரும்பாரை  வலிதிற் புணரும் வண்மையொடு கூட்டி;
செப்பிய  நான்கும்   பெருந்திணைக்குறிப்பே-கூறப்பட்ட  இந்த  நான்கும்  புரைபடுகாம இழிவெழுக்கத்தின்
வகை குறிப்பனவாகும்.
 

குறிப்பு:  திணை  என்பது  ஒழுக்கம். இங்குப் ‘பெருந்திணை; என்பது குறிப்பால் சிறிய ஒழுக்கம் எனப்
பொருள்படும். கழி காமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, “செருக்கும் சினமும்
 


1 அத்துணைக் கந்தருவம் என்ற தொடர் புரியவில்லை.
அப்பெருந்திணைக் கந்தருவம் என்ற கருத்துப்போலும்.
அப்படியாயின் அத்திணைக் கந்தருவம் என்றிருத்தல் வேண்டும்.

2 பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம்.

3 விழைச்சு விருப்பம்-இணை விழைச்சு.