பக்கம் எண் :

ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54437

இக்குறிஞ்சிக்கலியுள்,  ‘தீரத்தறைந்த  தலையும்’  -  வைகாண்   முதுபகட்டின்’  ’முதுபார்ப்பான்’ - என
வருதலால் இளமை தீர்ந்தான் ஒருவன் இணைவிழைச்சினை மேற்கொண்டான் என்பது புலனாகும்.
  

(3)     தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குத்,  தன்னை  விரும்பாப் பிறன்
மனையாளைப்  பெட்டொழுகும்    பேதையான  தென்னிலங்கை  அரக்கன்  காமக்கதை சாலும். இராவணன்
தன்  காமப்புரையுணர்ந்து   தேறாமல் இறக்குமட்டும்  உளத்ததனை  வளர்த்த  பெருந்திணைப் பெற்றியைக்
காட்டும் கம்பர் பாட்டுமிங்குக் கருதற்குரியது.
  

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி (மேலும் கீழும்
எள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கு மிடனாடியிழைத்த வாறோ?
கள்ளிருக்கு மலர்ந்த கூந்தற் சானகியை மனச்சிறையிற் (பரந்த காதல்
உள்ளிருக்கு மெனக்கருதி உடல்புகுந்து தடவியதோ (ஒருவன் வாளி”
 

(4) மிக்க காமத்து மிடல் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்:-
  

“என்றவ ளரசன்தன்னை நோக்கலன் இவன் கணார்வஞ்
சென்றமை குறிப்பிற்றேறிக், கூத்தெலா மிறந்த பின்றை
நின்றது மனத்திற் செற்றம், நீங்கித்தன் கோயில் புக்கான்
மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண்டொலி கொடாரான்

ரான். (சிந்தா.காந்.685)
 

“தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போதுபுல்லி,
ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட்டாங்கு-
கானுடை மாலைதன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து
தானுடை முல்லையெல்லாம் தாதுகப் பறித்திட்டானே.”

(சிந்தா.50 காந்-686)