பக்கம் எண் :

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப சூ.55439

நச்சினார்க்கினியர்
 

55. முன்னைய... .... ... ... ... என்ப
 

‘இது     முன்னைய  மூன்றுங்  2கைக்கிளைக்   குறிப்பே   (தொல்-பொ-கள-14)   எனக்  களவியலுட்
கூறுஞ்சிறப்பில்லாக்  கைக்கிளைபோலன்றி  காமஞ்  சாலா  இளமையோள்வயிற் கைக்கிளைபோல் இவையுஞ்
சிறந்தன. எனவே, எய்தாத தெய்துவித்தது.
 

(இ-ள்)   இயற்கைப்  புணர்ச்சிக்கு  முன்னிகழ்ந்த  காட்சியும் ஐயமுந் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு
நான்கும்   நற்காமத்துக்கு   இன்றியமையாது   வருதலின்   முற்கூறிய   சிறப்புடைக்  கைக்கிளை யாதற்கு
உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
  

களவியலுட்      கூறுங்   கைக்கிளை  சிறப்பின்மையின்  முன்னற்  குரியவெனச்  சிறப்பெய்துவித்தார்.
களவியலுள்   ‘ஒத்த   கிழவனுங்   கிழத்தியுங்  காண்ப’ (தொல்-பொ-கள-2) என்றது முதலாக இந்நான்குங்
கூறுமாறு  ஆண்டுணர்க.   இவை  தலைவி   வேட்கைக்  குறிப்புத்  தன்மே   னிகழ்வதனைத் தலைவன்
அறிதற்கு  முன்னே  தன்  காதன்மிகுதியாற்  கூறுவனவாதலிற்   கைக்கிளையாயிற்று.   இவை தலைவற்கே
உரிய   வென்பது,  ‘சிறந்துழியையஞ்  சிறந்ததென்ப’  (தொல்-பொ-கள-3)  என்னும் சூத்திரத்திற் கூறுதும்.
இவையும்    புணர்ச்சி    நிமித்தமாய்க்    குறிஞ்சியாகாவோவெனின்,   காட்சிப்பின்  தோன்றிய  ஐயமும்
ஆராய்ச்சியுந்    துணிவும்   நன்றெனக்   கோடற்கும்  அன்றெனக்  கோடற்கும்  பொதுவாகலின்  அவை
ஒருதலையாக நிமித்தமாகா; வழிநிலைக் காட்சியே3 நிமித்தமா மென்றுணர்க.

(52)
 


2 மூன்றாவன ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்பன.

3 வழி நிலைக்காட்சி. தலைவியின் குறிப்பறிந்த பின்னர்க் காணும்காட்சி. வழிநிலை-பின்னிலை