பக்கம் எண் :

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப சூ.55447

களை     வகுத்து,    அதுமுதல்   “எஞ்சியோர்க்கும்”   எனும்  41  ஆம்  சூத்திரம்  வரை  அவ்வுரிப்
பொருள்களுள்  ஒவ்வொன்றன்  தனிச்சிறப்பிலக்கணங்களையும்  அவ்வத்திணையொடு  நிரலே   வகைப்பட
விளக்கினர்.
 

இவையெல்லாம்     அன்புரித்திணைகள்   ஐந்தில்  ஒவ்வொன்றற்கே  சிறப்புரிமையுடையனவாதல் கூறி,
இவற்றின்பின்  “நிகழ்ந்தது   நினைத்தற்கு”   என்பது  (சூத்-42)  முதல்  “ஏனையுவமம்” என்பது (சூத்-48)
வரை   ஏழு   சூத்திரங்களுள்   இறுதி   நான்கில் உள்ளுரையுவமம் ஒன்றும், முதல் மூன்று சூத்திரங்களில்
தனிவேறு  மூன்றுமாக  நான்கு  பொது  இலக்கணங்களை  ஒத்த  காமத்திணை  ஐந்திற்கும் ஒத்த இயைபும்
தொடர்பும்  உடையனவாகத்  தெள்ளிதிற்   கொள்ள   வைத்தார்.   இவற்றுள்,   முதலிரு சூத்திரங்களைப்
(சூத்-43-44) பாலைக்கே உரியனபோல உரைகாரர் கூறுவது பொருத்தமற்றதாம்.
 

இரண்டறி கள்விருங் காத லோளே;
...................கான நாறவந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்,
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து
...................................................................
அமரா முகத்த ளாகித்
தம்மோ ரன்னள் வைகறை யானே”.

(குறுந்-312)
 

எனத்  தலைவிபால்  நிகழ்ச்சி  தலைவன்  தன்னுள்   நினைத்தற்கு  ஏதுவானதைக்  கூறும்   குறுந்தொகை
312 ஆம் பாட்டும்.
 

“அம்ம வாழி தோழி........................
மாற்றலம் யாமென மதிப்புக் கூறி
நம்பிரிந் துறைந்தோர், மன்ற நீ
விட்டனை யோஅவ ருற்ற சூளே”
 

எனமுன்     தலைவன்   நிகழ்த்தியசூளைத்  தோழி  தலைவியை  நினைக்கச்  செய்ததைக் கூறும் ஐங்குறு
நூற்றுச்  (227-ஆம்)  செய்யுளும்  பாலை  பற்றிய  அல்ல;    ஈரிடத்தும்  இவை    குறிஞ்சித் திணையில்
“நிகழ்ந்ததைப்பின்  நினைத்தற்கு  ஏது”  வானதையே  குறித்தன.  “மின்னொளிர்   அவிரறல்” என்னும்
குறிஞ்சிக்கலி (19-ஆம்) பாட்டும் அனையதே. இனி, “தீம்பால் கறந்த