கலமாற்றி” என வரும் முல்லைக் கலிச் (10-ஆம்) செய்யுளும் “கொடியவும் கோட்டவும்” எனவரும் குறிஞ்சிக்கலிச் (18ஆம்) செய்யுளும் தலைவி “முன்னிகழ்ந்தது கூறி நிலையலை “உணர்த்துவன; இவை முறையே முல்லையினும் குறிஞ்சியினும் வந்தன. இவ்வாறே இவ்விரு சூத்திரக் குறிப்புக்களும், உரைகாரர் கூறுமாறு பாலைக்குத் தனியுரிமை கொள்ளாமல், ஐந்திணை அனைத்திற்கும் வந்து பயிலும். ‘மரபுநிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும் விரவுவதும்,” “உள்ளுறை யுவமம் பயிலுவதும்”, ஒத்த காமத்திணை ஐந்திற்கும் ஒத்த உரிமையோ டொன்றிப் பயிலும் என்பதை உரைகாரரும் கூறுகின்றனர். அதனால், அவற்றிற்கு மேற்கோள்மிகையாகும். |
எதிர்பாரா நிலையில் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காணுதலும், யார் என ஐயப்படுதலும், சில குறிப்புகளால் ஐயம் நீக்குதலும், கண்களின் பார்வைக்குறிப்பால் புணர்ச்சி விருப்பம் தெளிதலும் ஆகிய நான்கும் நிகழ்ந்த பின்னரே புணர்ச்சி நிகழும் ஆதலின் அக்காட்சி, ஐயம், தெரிதல், தேறல் என்னும் நான்கும் எதன்பாற்படும் என்னும் ஐயம் தோன்றும் ஏன்எனின் புணர்தல் தொடர்பாகக் குறிஞ்சியொழுக்கம் தொடங்குதலின் குறிஞ்சித் திணை என்பது புணர்ச்சியையே குறித்ததாம். அதனால் அந்நான்கும் தலைவன் கண்ணவாகவே புலனெறிவழக்கம் செய்யப்படுதலின் காமம்சாலா இளமையோள் வயிற்கைக் கிளைபோல ஒருமருங்கு பற்றியதாகவே கொண்டு கைக்கிளையின் பாற்படுத்தல் நூலோர் துணிபாயிற்று. |