பக்கம் எண் :

450தொல்காப்பியம் - உரைவளம்

களவொழுக்கம்   நடத்தி  இலக்கண   வகையான்   வரைந்தெய்தினார்   எனவும், பிறவும் இந்நிகரனவாகிச்
சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்.
 

உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு1 ஒத்து வருவது.
 

பாடல்  சான்ற  புலன்நெறி  வழக்கமாவது,  இவ்விருவகை  யானும்  பாடல் சான்ற கைக்கிளை முதலாப்
பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.2
 

கலியே  பரிபாட்டு  அ  இரு பாவினும் உரியது ஆகும் என்மனார்  புலவர் என்றது, கலியும் பரிபாடலும்
என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு.
 

எனவே,  இவை இன்றியமையாதன என்றவாறு. ஒழிந்த பாக்கள்  இத்துணை  அகப்பொருட்கு உரியவாய்
வருதலின்றிப்  புறப்  பொருட்கும் உரியவாய்   வருதலின்  ஓதாராயினர்.  புறப்பொருள் உலகியல் பானன்றி
வாராமையின் அது நாடக வழக்கம் அன்றாயிற்று.

(56)
 

நச்சினார்க்கினியர்
 

56. நாடக..............புலவர்
 

இது  புலனெறி   வழக்கம்  இன்னதென்பதூஉம், அது நடுவணைந்திணைக்கு உரிமையுடைத்தென்பதூஉம்,
இன்ன செய்யுட்கு உரித்தென்பதூஉம் உணர்த்துதனுதலிற்று.
 


1 ஒழுகலாறு-நடைமுறை

2 அகப்பொருட்   செய்தியாவும்  புலனெறி  வழக்கிலேயே பாடப்படும் என்பது இவர்  கருத்து. புலனெறி
வழக்கில் பாடப்படுதலால் கைக்கிளை பெருந்திணைகளும் அகப்பொருளாகும் என்பதும் இவர் கருத்து.