வற்றுட் காண்க. மருட்பாத் ‘தானிதுவென்னுந் தனிநிலை’1 (தொல்-பொ-செய்-85) இன்மையின் வரைநிலையின்று, |
“மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்னும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே” |
(ஐங்குறு-11) |
இதனுள் முதல் கரு வுரிப்பொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக வழக்குந், தலைவனைத் தலைவி கொடுமைகூறல் உலகியலாகலின் உலகியல் வழக்கும் உடன்கூறிற்று2. இவ்விரண்டுங் கூடிவருதலே பாடலுட் பயின்ற புலனெறி வழக்கமெனப்படும். இவ்விரண்டினும் உலகியல் சிறத்தல் ‘உயரிந்தோர் கிளவி’ (தொல்-பொ-பொரு-23) என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபியலானும் பெறுதும். |
“முளிதயிர் பிசைந்த காந்தன் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே” |
(குறுந்-197) |
இஃது உலகியலே வந்தது. |
இனி அவ்வந் நிலத்து மக்களே தலைவராய்க்கால் அவை உலகியலேயாம். |
இனி கைக்கிளையுள் அசுரமாகிய ஏறு கோடற் கைக்கிளை, காமப்பொருளாகிய புலனெறி வழக்கில் வருங்கால், முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம் |
1 தனிநிலை - இன்னபாட்டு இது எனக்கூறப்படும் தனி நிலை வெண்பாவு ஆசிரியமும் சேர்ந்தது மருட்பா ஆதலின் அதற்கெனத்தனிநிலை இல்லை. 2 சிவலிங்கனார் விளக்கம் பார்க்க. |