பக்கம் எண் :

452தொல்காப்பியம் - உரைவளம்

வற்றுட்    காண்க.   மருட்பாத்    ‘தானிதுவென்னுந்  தனிநிலை’1  (தொல்-பொ-செய்-85)  இன்மையின்
வரைநிலையின்று,
 

“மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந்
துறைகே ழூரன் கொடுமை நாணி
நல்ல னென்னும் யாமே
யல்ல னென்னுமென் றடமென் றோளே”

(ஐங்குறு-11)
 

இதனுள்     முதல்  கரு  வுரிப்பொருளென்ற  மூன்றுங் கூறலின் நாடக வழக்குந், தலைவனைத் தலைவி
கொடுமைகூறல்   உலகியலாகலின்  உலகியல்  வழக்கும்   உடன்கூறிற்று2.   இவ்விரண்டுங்   கூடிவருதலே
பாடலுட்  பயின்ற  புலனெறி  வழக்கமெனப்படும்.   இவ்விரண்டினும்   உலகியல்   சிறத்தல்  ‘உயரிந்தோர்
கிளவி’ (தொல்-பொ-பொரு-23) என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபியலானும் பெறுதும்.
 

“முளிதயிர் பிசைந்த காந்தன் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
ரினிதெனக் கணவ னுண்டலி
னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

(குறுந்-197)
 

இஃது உலகியலே வந்தது.
 

இனி அவ்வந் நிலத்து மக்களே தலைவராய்க்கால் அவை உலகியலேயாம்.
 

இனி  கைக்கிளையுள்   அசுரமாகிய  ஏறு  கோடற்  கைக்கிளை,  காமப்பொருளாகிய புலனெறி வழக்கில்
வருங்கால், முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம்
 


1 தனிநிலை  -  இன்னபாட்டு  இது    எனக்கூறப்படும்   தனி நிலை வெண்பாவு ஆசிரியமும் சேர்ந்தது
மருட்பா ஆதலின் அதற்கெனத்தனிநிலை இல்லை.

2 சிவலிங்கனார் விளக்கம் பார்க்க.