7. இதில் பழனம் நில முதற்பொருள் பனிமலரில் வண்டு ஊதும் நேரம் வைகறையாதலின் அச்சிறு பொழுதும் ஆகிய முதற்பொருளும், காரான்வள்ளை முதலிய கருப்பொருளும், பிறவும் ஒருத்தியை வதுவை அயர்ந்தனை யாரையோ நிற்புலக்கேம், சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே என்பனவற்றால் ஊடலும் வாயில் மறுத்தலுமாகிய உரிப்பொருளும் உள்ளமை காண்க. |