பக்கம் எண் :

460தொல்காப்பியம் - உரைவளம்

இனி     அவை1 வரையறையுடைமை2 மேலைச்சூத்திரத்தான்   அறிக. “கன்று முண்ணாது கலத்தினும்
படாது-நல்லான்றீம்  பானிலத்துக்கவினே.”
  இது  (குறுந்-27) வெள்ளி வீதியார் பாட்டு “மள்ளர் குழீஇய
விழவினானும்  மகனே”
 (குறுந்-31)   இது காதற்கெடுத்த  ஆதிமந்தி  பாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற்
புறமாமென்றஞ்சி  வாளாது கூறினார்3. ஆதிமந்திதன்   பெயராலுங்   காதலனாகிய ஆட்டனத்தி பெயராலுங்
கூறிற் காஞ்சிப்பாற்படும்4.
  

“ஆதி மந்திபோல
ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே.”

(அகம்-236)
 

எனவும்,
 

“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே.”

(அகம்-147)
 

எனவும், அகத்திணைக்கட் சாத்துவகையான்5 வந்தன அன்றித் தலைமை வகையாக வந்தில என்பது.
 


1 அவை-அகன் ஐந்திணைகள்

2 உரிப்பொருள்   தலைவர்  அகத்திணைகட்கு   ஒருவராதலும்      புறத்திணைகளுக்குத்    தலைவர்
பலராதலும்  வரையறை என்பது  இவர் அடுத்துவரும் சூத்திரவுரையில் கூறியுள்ளார். தொல்காப்பியர்
அவ்வாறு கூறவில்லை. ‘அளவுதல்’  என்பதால்  கொண்டார். “வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி   மேலவும்  சிலம்பே”  (  )  என்னும்  பாடலில்  தலைவனும்  தலைவியும்  உரிப்பொருள்
தலைவராமை காண்க.

3 வெள்ளி    வீதியாரும்   ஆதிமந்தியும்   புலவராயிருந்து   தத்தம்  வாழ்க்கையை  அப்பாடல்களில்
கூறினாராயினும்    தத்தம்    இயற்பெயரைச்    சுட்டாமல்   கூறியிருத்தலின்   அவர்   பாடல்கள்
அகப்பாடல்களாயின.

4 காஞ்சித்திணையில் தாபதநிலைத் துறைப்பாற்பட்டுப் புறத்திணையாம்.

5 சார்த்துவகை-உவமையாக எடுத்துச் சார்த்தியவகை.