பாரதியார் |
57. மக்கள்......................பெறாஅர் |
கருத்து: இது, அன்பினைந்திணைக்குச் சிறந்த ஒரு மரபு கூறுகிறது. |
பொருள்:- மக்கள் நுதலிய அகனைந்திணையும் - மக்கள் மதிக்கும் காதல் கண்ணிய நடுவணைந்திணைகளிலும்; ஒருவர் சுட்டிப் பெயர் கொளப் பெறாஅர் - தலைமக்கள் தம்முள் யாரும் இயற்பெயர் சுட்டி அகவப்பெறார்.1 |
குறிப்பு:- காதல் கண்ணிய ஐவகை அகவொழுக்கமும் நாண்-தன்னலமறக்கும் அன்பு-காதலாற் றவறுகாணாமடம்-முதலிய சால்புகளாற் சிறந்த மக்கட் தன்மைக்கே இயைவதாகலின். “மக்கள் நுதலிய அகனைந்திணை” எனக்கூறப்பட்டது ‘மக்கள் நுதலிய, என்பது மக்கள் தாம் பொருளாகக் கருதிய என விரியும். இனி, மக்கள் என்பதை, மக்கட்டன்மை கட்டுதலாகக் கொண்டு அத்தன்மை நுதலிய எனக் கொள்ளுதலும் ஒன்று. |
தலைமக்கள் இருபாலோருள் எவரும் தம்பெயர்சுட்டி அகவப்பெறாராதலின், இருபாற்கு முரித்தாகிய ‘ஒருவர்’ என்னும் பொதுப் பெயரால் அம்மரபு கூறப்பட்டது. |
‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’ என்பதனால் அளவளவில்லை அகவிச் சுட்டாத பிறவிடங்களில் தலைமக்கள்பெயர் கூறுப்பெறுதல் தவறாகாதென்பதை, இளம்பூரணர் கொண்டபடி இதில் குறிப்பெச்சத்தாற் கொள்ளவிட்டு ஐயத்திற்கிடம் வையாமல், தொல்காப்பியர் அடுத்த சூத்திரத்தில் தெளியக்கூறுவர்3. |
1 அகவப்பெறார்-அழைக்கப்பெறார். 2 உரையாடலில் 3 “சுட்டியொருவர்................தெரியக்கூறுவர்” - இப்பகுதி விளக்கம் இல்லை. ஒருவரையொருவர் அழைக்குமிடத்தில் சுட்டிப் பெயர் கூறப்படாது என்பதும் பிறவிடங்களில் கூறப்படும் என்பதும் இவர் கருத்து யாண்டும் சுட்டுதல் இல்லையாதலின் இது பொருந்தாது. ‘இளம் பூரணர் கொண்டபடிக்குறிப்பெச்சத்தால் கொள்ளவிட்டு என்றிருப்பதுதவறு. இளம்பூரணர் உரையில் அவ்வாறில்லை. |