சிலப்பதிகாரம் சிந்தாமணி போன்ற பண்டைச் செய்யுட்களில், யாண்டும் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அகவி அவ்வளவுதல் கூறப்பெறாமையும், அவ்வாறு அளவுதல் குறியாப்பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதலும் ஈண்டுக் கருதத்தக்கன.4 |
காதலாற் கலந்தார்க்கு, “ஈருயிரென்பார் இடைதெரியார்” அவர் தம்முள் ஒருயிராக உணர்வாராதலின் அவ்வுணர்ச்சி வயப்பட்டாருள் ஒருவர் ஒருவரை தம்மில் வேறுபட்ட பிறர்போலப் பெயர் சுட்டியளவுதல் இருமை நீங்கிய அவர் ஒருமைக் காதலுணர்ச்சியோடு இயைவதன்று; ஆதலின் அவ்வாறு அளவுங்கால் ‘என்னுயிர்’ ‘என் கண்’ என்பன போன்ற வேறன்மையை விளக்குந்தற்கிழமைக் காதற் குறியீடுகள் கூறியளவுதலே இயல்பாகும். |
(1) “இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே; இவன்வயிற் செலினே இவட்கும் அற்றே; காக்கை யிருகணின் ஒருமணி போலக் குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவா ழுயிரே.” |
(2) “காணா மரபிற் றுயிரென மொழிவோர் நாணிலர், மன்ற பொய்மொழிந் தனரே; யாஅங் காண்டுமெம் அரும்பெற லுயிரே; சொல்லும், ஆடும், மென்மெல இயலும், கணைக்கால் நுணகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.” |
என்ற பழம் பாட்டுக்கள் காதலிற் கலந்தாரின் ஒருமையுணர்ச்சியை வலியுறுத்தும். |
4 இப்பகுதிக்கருத்தும் பொருந்தாது சிலப்பதிகாரம் முதலியன அகன் ஐந்திணை இலக்கியங்கள் அல்ல. |