தலைமக்கள் தம்முள் அன்பளவுதலில் மட்டும் “சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்” எனவும், அவ்வாறு அவருள் அன்பளவுதலின் புறத்தே அகப்பகுதிகளில் ஏற்புடையிடங்களில் பெயர் கூறப்பெறுதல் கடியப்படாதெனவும், முறையே இவ்விரு சூத்திரங்களானும் தொல்காப்பியர் விளங்க வைத்தார். |
இனி, இதுவே தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கினும் செய்யுளினும் அடிப்பட்டு வந்த ஆன்றமரபா மென்பது, சான்றோர் செய்யுட்களானும் தமிழ் மக்கள் கையாளும் ஆன்ற வழக்கானும் தேறப்படும். |
சிலப்பதிகாரம் சிந்தாமணி இராமாயணம் போன்ற சான்றோர் செய்யுட்களில் இம்மரபாட்சி கண்டு தெளிக. |
“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடி வணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப்பிறவா இசையே என்கோ? தாழிருங் கூந்தல் தையால்! நின்னை” |
என்று சிலப்பதிகாரத்தின் தலைநாட் கூட்டத்துக்குப் பின் தன் தலைவியொடு அளவளாவும் கோவலன் அவள் நலம் பாராட்டும் குறிஞ்சித் திணையில் தலைவி பெயர்சுட்டாமல் அளவுதல், அகனைந்திணையில் தலைமக்கள் அளவளாவுமிடத்து ஒருவர் பெயரை மற்றொருவர் சுட்டாமரபு காட்டும். அஃதல்லாவிடத்துப்பெயர் சுட்டும் வழக்குண்மையை, |
“ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வானின் மகனே யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா / நின்னகர் புகுந்திங் கென்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் |