இவை கைக்கிளை பாக்காளதலிற் பெயர் கூறப்பெற்றது என்பார்க்கு, பெண்பாற் கைக்கிளை பிற்காலப் பிழை வழக்காவதன்றிப் பண்டைப்புலவர் கொண்ட ஆன்ற வழக்கன்மையானும், தொல்காப்பியர் கைக்கிளையை ஆடவர்க்கே அமைத்துப்பெண்டிரின் ஒரு தலைக்காமம் முதலிய மற்றனைத்தையும் பெருந்திணையிலடக்கி யமைவாராதலானும், இப்பழைய வெண்பாக்கள் அன்பினைந்திணைத் துறையே கூறுவனவாமெனக் காட்டி மறுக்க மேலும், இதில், “ஐந்திணைமருங்” கென்னாது, ‘அகத்திணை மருங்கில்’1 என்றதனால், இந்நூற்பாக் கட்டளைக்குக் கைக்கிளை விலக்கின்மையாலுமவர் கூற்றுப் பொருந்தாதென்க |