3. சிறப்பாவது அவ்வந் நிலக் கருப்பொருள் அவ்வத்திணைப் பாடலில் வருவது. 4. சிறப்பின்மையாவது ஒரு நிலக் கருப் பொருள் தன் தன் நிலத்திணைப் பாடலில் வராமல் வேற்றுத்திணைப்பாடலில் வருவது. 5. சூ 12-19 மேலே கொள்க - மேற் சூத்திரங்களில் உணர்ந்து கொள்க. 6. காலம் - முதுவேனிற்காலமும் நண்பகலும். 7. கருப்பொருள் - உலரியமரம் நீரற்ற சுனை முதலியன. |