பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.545

இல.வி.அ.10
  

வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவையவை சேர்தரும் இடனே
எனவீ ரைந்தும் இயம்பிய நிலனவை
குறிஞ்சி முதலா அகன்ஐந் திணைக்கும்
உறுந்திற முறையாண் இரண்டிரண் டுரிய

  

தமிழ்நெறி விளக்கம் 3
  

பொறுப்பே வெம்பரல் புறவொடு பழனம்
பரப்பமை வாரி குறிஞ்சி முதல் பாகே

  

தொன் 174 முத்து. அக.9
  

வரையே வனமே சுரமே மருதம்
நிரையே அளவியவை சேர்தரும் இடனே.

  

இளம்பூரணர்
  

5. மாயோன்......................... படுமே.
  

இது நிறுத்த முறையான்1 நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  மாயோன்   மேய  காடு  உறை  உலகமும்  மாயவன்  மேவிய2  காடு  பொருந்திய உலகமும்,
சேயோன்  மேய மைவரை உலகமும் - முருகவேள்  மேவிய   மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல்
உலகமும்  -  இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும்,  வருணன்  மேவிய  பெருமணல்  உலகமும்,  முல்லை
குறிஞ்சி  மருதம்  நெய்தல்   என   சொல்லிய   முறையால்  சொல்லவும்படும்  முல்லை  குறிஞ்சி  மருதம்
நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும்.
  


1. முன் சூத்திரத்தில் நிலம்பொழுது என நிறுத்த முறை.

2. மேவிய - விரும்பிய.