பக்கம் எண் :

48தொல்காப்பியம் - உரைவளம்

இந்திரன்     காதலித்த   தண்புனனாடும்,  வருணன்  மேய  பெரு  மணல் உலகமும் - கருங்கடற் கடவுள்
காதலித்த  நெடுங்கோட்டெக்கர்  நிலனும்,  முல்லை  குறிஞ்சி  மருதம்  நெய்தல் எனச்சொல்லிய முறையால்
சொல்லவும்   படுமே   -   முல்லை  குறிஞ்சி   மருதம்   நெய்தலென   ஒழுக்கங்   கூறிய  முறையானே
சொல்லவும்படும் என்றவாறு.
  

இந்நான்கு     பெயரும்  எண்ணும்மையோடு  நின்று  எழுவாயாகி,  ‘சொல்லவும்படும்’ என்னுந் தொழிற்
பயனிலை    கொண்டன.   என்றது   இவ்வொழுக்கம்  நான்கானும்   அந்நான்கு   நிலத்தையும்  நிரனிறை
வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடனாயிற்று.
  

உம்மை   எதிர்மறையாகலின்,    இம்முறையன்றிச்    சொல்லவும்  படுமென்பது  பொருளாயிற்று.  அது
தொகைகளினுங்1 கீழ்க்கணக்குக்களினும்2 இம்முறை மயங்கி வரக் கோத்தவாறு காண்க.
  

முல்லை  நிலத்துக்  கோவலர்,  பல்லா பயன்  தருதற்கு மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்கவெனக்
குரவை தழீஇ மடைபல கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்படுமென்றார்.
  

உதாரணம்:- ‘அரைசுபடக் ‘கடந்தட்டு’ என்னு முல்லைக் கலியுள்,
  

“பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய
வாடுகொ ணேமியாற் பரவுதும்”

(கலி-105)
 

எனவரும்.
  

“படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும்
பாலொடு கோட்டம் புகின்”

(கலி-109)
 

என   அவன்  மகனாகிய   காமனும்   அந்நிலத்திற்குத்  தெய்வமாதல்  ‘அவ்வகை  பிறவுங்  கருவென
மொழிப’ (18) என்புழி வகையென்றதனாற் கொள்க.
  


1. தொகைகள்.  எண்ணுத்  தொகை  கொடுத்துக் கூறப்படும் அகநானூறு நற்றிணை நானூறு ஐங்குறு நூறு
முதலிய நூல்கள்.

2. கீழ்க்கணக்குகள்.  ஐந்திணை   ஐம்பது,   ஐந்திணை  எழுபது  திணைமாலை  நூற்றைம்பது  முதலிய
நூல்கள்.