இந்திரன் காதலித்த தண்புனனாடும், வருணன் மேய பெரு மணல் உலகமும் - கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங்கோட்டெக்கர் நிலனும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென ஒழுக்கங் கூறிய முறையானே சொல்லவும்படும் என்றவாறு. |
இந்நான்கு பெயரும் எண்ணும்மையோடு நின்று எழுவாயாகி, ‘சொல்லவும்படும்’ என்னுந் தொழிற் பயனிலை கொண்டன. என்றது இவ்வொழுக்கம் நான்கானும் அந்நான்கு நிலத்தையும் நிரனிறை வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடனாயிற்று. |
உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படுமென்பது பொருளாயிற்று. அது தொகைகளினுங்1 கீழ்க்கணக்குக்களினும்2 இம்முறை மயங்கி வரக் கோத்தவாறு காண்க. |
முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன் தருதற்கு மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்கவெனக் குரவை தழீஇ மடைபல கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்படுமென்றார். |
உதாரணம்:- ‘அரைசுபடக் ‘கடந்தட்டு’ என்னு முல்லைக் கலியுள், |
“பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய வாடுகொ ணேமியாற் பரவுதும்” |
(கலி-105) |
எனவரும். |
“படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின்” |
(கலி-109) |
என அவன் மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் ‘அவ்வகை பிறவுங் கருவென மொழிப’ (18) என்புழி வகையென்றதனாற் கொள்க. |
1. தொகைகள். எண்ணுத் தொகை கொடுத்துக் கூறப்படும் அகநானூறு நற்றிணை நானூறு ஐங்குறு நூறு முதலிய நூல்கள். 2. கீழ்க்கணக்குகள். ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்கள். |