பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.549

இனி,  குறிஞ்சி  நிலத்திற்குக்   குறவர்  முதலியோர்  குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள்கொண்டு
வெறியயர்பவாகலின், ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார்.
  

அது, ‘அணங்குடை நெடுவரை’ என்னும் அகப்பாட்டினுள்
  

“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள்”

(அகம்-22)
 

எனவரும். சூரர மகளிரொ டுற்ற சூளே என்புழிச் சூரர மகளிர் அதன் வகை.
  

இனி    ஊடலுங் கூடலுமாகி  காமச்சிறப்பு  நிகழ்தற்கு  மருத நிலத்திற்குத் தெய்வமாக ‘ஆடலும் பாடலு
மூடலுமுணர்தலும்’  உள்ளிட்ட  இன்ப  விளையாட்டு  இனிது  நுகரும்  இமையோர்க்கு  இன்குரலெழிலிக்கும்1
இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்தலின் அவன் வெளிப்படுமென்றார்.
  

அது
  

“வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை
தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு”

(கலி-98)
 

என இந்திரனைத் தெய்வமென்றதனானும், இந்திர விழவூரெடுத்த காதையானும் உணர்க.
  

இனி  நெய்தனிலத்தில்   நுளையர்க்கு   வளைவளந்தப்பின்  அம்மகளிர்  கிளையுடன்  குழீஇச்  சுறவுக்
கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படு மென்றார். அவை,
  

“சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்”

(பட்டின-86-87)
 

எனவும்,
  

“கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வ நோக்கி”

(அகம்-110)
 

எனவும்,
  


1. இன்குரல்எழிலி - இடியுடன் கூடிய மேகம்.