50 | தொல்காப்பியம் - உரைவளம் |
“அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமொ டயரும்” | (அகம்-240) | எனவும் வரும். | இனிப் பாலைக்கு, | “சினைவாடச் சிறக்குநின் சிறந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ” | (கலி-16) | எனவும், | “வளிதரு செல்வனை வாழ்த்தவு மியை வதோ” | (கலி-16) | எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றிய மழையினையுங் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன்கட் கொடுக்கு மென்பது வேதமுடிபாகலின், ஆதித்தன் அவ்வெல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற் பொருளோடு கூட்டிக் கூறியது தெய்வவழி பாட்டு மரபு இதுவே, ஒழிந்தது மரபன்றென்றற்கு. எனவே அவ்வந் நிலத்தின் தெய்வங்களே பாலை நிலத்திற்குந் தெய்வமாயிற்று. | உறையுலகென்றார், ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றற்கு மைவரை எனவே மழைவளந்தருவிக்கும் முருகவேளென்றார் இந்திரன் யாற்றுவளனும் மழைவளனுந் தருமென்றற்குத் தீம்புன லென்றார் திரை பொருது கரை கரையாமல் எக்கர் செய்தல் கடவுட் கருத்தென்றற்குப் பெருமணலென்றார். | இனி, முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் என்ற முறையென்னை, யெனின், இவ்வொழுக்க மெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்திக் கணவன் சொற் பிழை |
|
|