தெய்வத்தை முதற்பொருளோடு கூறியது அவை ‘வந்த நிலத்தின் பயத்தவாய்’ (19) மயங்குமாறு போல மயங்காது இதுவே யென்றற்கும், கருப்பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கும்1 என்றுணர்க. |
உதாரணம் :- |
“வன்புலக் காட்டுநாட் டதுவே” |
(நற்றிணை - 59) |
எனவும், |
“இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் ...................கன்மிசைச் சிறுநெறி” |
(அகம்-128) |
எனவும், |
“அவ்வய னண்ணிய வளங்கே ழூரனைப் புலத்தலுங் கூடுமோ தோழி” |
(அகம்-26) |
எனவும், |
“கானலுங் கழறாது...................மொழியாது |
(அகம் - 170) |
எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க. |
பாரதியார் |
5. மாயோன்..............................படுமே. |
கருத்து :- இது மேலே இரண்டொரு சூத்திரத்துட் கூறியாங்கு, நானிலம் முறையே நான்குதிணைக்கு உரிமை பெறுமுறை கூறி, நில முதற்பொருள் திணையுரிப் பொருளொ டியையுமாறு விளக்குகிறது. |
பொருள் :- மாயோன்மேய காடுறையுலகமும் - கருநிறக்கடவுள் உறைவிடமாகிய நிரைமேயும் காட்டு நிலப்பகுதியும்; சேயோன்மேய மைவரையுலகமும் - செவ்வேளுரையும் மஞ்சு தவழும் மலைநிலப்பகுதியும்; வேந்தன்மேய தீம்புனலுலகமும் இந்திரனுக்கிருப்பிடமாகிய இனி புனல்நிறை நிலப்பகுதியும்; |
1. பாலைக்கு நிலம் இல்லையாதலின் தெய்வமும் இல்லை என்பது இவர் கருத்துப் போலும். |