முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணமென்னை யெனின், பிரிந்து மீளுந் தலைவன்றிறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங்கூறுவனவெல்லாம் பாலையுயும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குந்தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம். என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன், விரை பரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக்காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமுள் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்துவரும் இளையர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், ஆர்பதம்6 மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளூந் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்குந் தலைவிக்குங் காமக்குறிப்பு மிகுதலானுமென்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழ லிசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்குங் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று. |