பக்கம் எண் :

58தொல்காப்பியம் - உரைவளம்

எற்பாடெனவும்     ஆறாகப்   பகுத்தார்.  அவை   ஓரோவொன்று   பத்துநாழிகையாக    இம்முறையே
சூத்திரங்களுட்  சிறுபொழுது  வைப்பர்   பின்பனியும்   நண்பகலும்  பிற்கூறிய  காரணம் அச்சூத்திரத்துட்
கூறுதும்.
  

முல்லைக்குக்     காரும்   மாலையும்   உரியவாதற்குக்   காரணமென்னை  யெனின்,  பிரிந்து  மீளுந்
தலைவன்றிறமெல்லாம்  பிரிந்திருந்த  கிழத்தி   கூறுதலே  முல்லைப்  பொருளாயும், பிரிந்து போகின்றான்
திறங்கூறுவனவெல்லாம்   பாலையுயும்   வருதலின்,   அம்முல்லைப்   பொருளாகிய   மீட்சிக்குந்தலைவி
இருத்தற்கும்   உபகாரப்படுவது   கார்காலமாம்.   என்னை?   வினைவயிற்  பிரிந்து  மீள்வோன்,  விரை
பரித்தேரூர்ந்து  பாசறையினின்று  மாலைக்காலத்து  ஊர்வயின்  வரூஉங்காலம்  ஆவணியும்  புரட்டாதியும்
ஆதலின்,  அவை  வெப்பமுள்  தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி  ஏவல்  செய்துவரும்   இளையர்க்கு
நீரும்  நிழலும்  பயத்தலானும், ஆர்பதம்6 மிக்கு நீரும் நிழலும்  பெறுதலிற்  களிசிறந்து  மாவும்   புள்ளூந்
துணையோடின்புற்று     விளையாடுவன    கண்டு     தலைவற்குந்     தலைவிக்குங்     காமக்குறிப்பு
மிகுதலானுமென்பது.  புல்லைமேய்ந்து  கொல்லேற்றோடே  புனிற்றாக் கன்றை நினைந்து  மன்றிற் புகுதரவும்
தீங்குழ   லிசைப்பவும்   பந்தர்முல்லை   வந்து   மணங்கஞற்றவும்   வருகின்ற   தலைவற்கும்   இருந்த
தலைவிக்குங் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று.
  

இனிக்    குறிஞ்சியாவது  புணர்தற்பொருட்டு. அஃது  இயற்கைப் புணர்ச்சி  முதலியனவாம். இயற்கைப்
புணர்ச்சி  நிகழ்ந்தபின் களவு  நீட்டிப்பக்  கருதுந்  தலைவற்கு  அக்களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி
அரியளாக  வேண்டுமாகவே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிரும் அதன்
இடையாமமு மென்பது. என்னை?7 இருள் தூங்கித்


6. ஆர்பதம் - உணவு
  

7 பாக!   காரும்   ஆர்கலி   தலையின்று;    மாலை   புதல்வர்ப்பொய்க்கும்  பூங்கொடி  நிலையைத்
தேர்கடவிக்  காண்குவம்  என்றலின் பாகற்குரைத்த   உரிப்பொருள்  காண்க.  கார்  எனவும் மாலை எனவும் வந்தன பொழுதுகள்.