பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.6, 761

பொருள் :- காரும்   மாலையும்   முல்லை  -  கார்காலமாகிய   பெரும்   பொழுதும்,  மாலையாகிய
சிறுபொழுதும்  முல்லைத்திணைக்குச்  சிறந்தன;  குறிஞ்சி   கூதிர்   யாமம்  -  கூதிரென்னும் பின்பெயர்
சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்குச் சிறந்தன; என்மனார் புலவர் - என்று கூறுவர் புலவர்.
  

குறிப்பு :- ஓராண்டு - இளவேனில்,  முதிர்வேனில், கார்  கூதிர், முன்பனி, பின்பனி, என இவ்விரண்டு
திங்கள்  கொண்ட  பருவம்  அல்லது  பெரும்  பொழுது   ஆறாகப்  பகுக்கப்படும்   இதில் கார் காலம்
முன்பெயற்காலமான ஆவணியும் புரட்டாசியும் எனத் திங்களிரண்டுகொண்ட பெரும் பொழுதாகும்.
  

பகல்-விடியல் அதாவது  காலை,  நண்பகல்  எற்பாடு  எனவும்,  இரவு  -  மாலை,  யாமம், வைகறை
யெனவும்,  பகல்  மூன்று  இரவு  மூன்றாக  ஆறு சிறுபொழுதுகள் கூடியது ஒரு நாளாகும், ஈண்டு ‘யாமம்’
என்பது  நள்ளிரவு  (இரவின்  நடுக்கூறு)   குறிக்கும்   தமிழ்ச்சொல்;   ஏழரை  நாழிகைகொண்ட நாளின்
எட்டிலொரு பகுதி சுட்டும் சாமம், வடசொல், இவற்றை ஒன்றெனக்கருதி மயங்குதல் தவறு.
  

காரு மாலையும் முல்லைக்குச் சிறத்தலுக்குச் செய்யுள்:-
  

“முகை முற்றினவே   முல்லை.  முல்லையொடு  தகை  முற்றினவே  தண்கார்,  வியன்புலம் வாலிழை,
நெகிழ்த்தோர்  வாரார்,  மாலை  வந்தன்றென்  மாணலங்குறித்தே.” (குறுந்-188) இதில், குறித்த பருவத்தில்
வாராத்  தலைவன்  பிரிவால்  வருந்தி  இருக்கும்  தலைவிக்குக்   காரும்  மாலையும்  துன்பம்  தருதல்
கூறுதலால் முல்லைக்குரிய பருவம் பொழுதும் ஒருங்குற்ற பெற்றியறிக.
  

“பழ மழை கலித்த ... .... ....
....... ..... ..... ...... ...... ...... .... ......
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி, பொருட் பிரிந்தோரே.”
 

(குறுந்-220)
 

என்பது மிதுவே.