(இ-ள்) பனிஎதிர் பருவமும் உரித்து எனமொழிப முன் பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர்.1 |
இதனைக் கூதிர்க் காலத்தோடு ஒருங்கு கூறாமையின், அத்துணைச் சிறப்பிற்று அன்றெனக் கொள்க. குறிஞ்சி என்றது அதிகாரத்தான் வந்தது. |
முன்பனிக் காலமாவது மார்கழித் திங்களும் தைத்திங்களும். உம்மை இறந்தது தழீஇய2 எச்ச உம்மை. |
(8) |
நச்சினார்க்கினியர் |
8. பனியெதிர்..............................மொழிப. |
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். |
இதன் பொருள் :- பனிஎதிர் பருவமும் உரித்துஎன மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று. அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வரும் |
உரித்தென்றதனாற் கூதிர்பெற்ற யாமமும் முன்பனி பெற்றுவரும் எனக்கொள்க. |
உதாரணம்: |
“பனியடூஉ நின்ற பானாட் கங்குற் றமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலை.” |
(அகம்-124) |
என முன்பனியாமங் குறிஞ்சிக் கண் வந்தது. |
1. குறிஞ்சிக்கு உரித்தென்று சொல்லுவர். |
2. முன் சூத்திரத்துக்கூறிய கூதிர்ப் பருவத்தைத்தழுவியது. |