பக்கம் எண் :

66தொல்காப்பியம் - உரைவளம்

முத்து. அக.18
  

எற்பாடுநெய்தக் குரிய தாகும்.
  

இளம்பூரணர்
  

9. வைகறை .................. மருதம்.
  

இது மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்) வைகறை விடியல் மருதம்-வைகறையும் விடியலும் மருதத்திற்குக் காலமாம்.
  

வைகறையாவது    இராப்பொழுதின்   பிற்கூறு.  விடியலாகும்   பகற்பொழுதின்   முற்கூறு.   பருவம்
வரைந்தோதாமையின் அறுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது1 நெய்தற்கும் ஓக்கும்.

(9)
 

10. எற்பாடு ........................... தோன்றும்
  

நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
  

இது நெய்தற்றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று,
  

(இ-ள்)  எற்பாடு-எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற தோன்றும்-நெய்தற்றிணைக்குக் காலமாதல்
பொருண்மை பெறத் தோன்றும்.
  

எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு                                                 (10)
 

நச்சினார்க்கினியர்
  

9. வைகறை விடியன் ................. தோன்றும்
  

இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.
  

இதன் பொருள் :- வைகுறு  விடியல்  மருதம் -  வைகறையும்  விடியற்காலமும் மருதமாதலும் எற்பாடு
நெய்தல் ஆதல் மெபெறத் தோன்றும்-எற்பாடுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் என்றவாறு.
  

வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது.
  

செவியறிவுறுத்தலைச்  செவியறிவுறூஉ  (423)  என்றாற்போல  வைகுறுதலை  வைகுறு  என்றார்.  அது
மாலையாமமும் இடை


1. இது - அறுவகைப்பருவமும் கொள்ளப்படுதல்.