பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.9, 1069

கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி
நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தகைஇ
வல்வில் விளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செவினே சிதைகுவ துண்டோ
பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை
யன்றி லகவு மாங்கட்
சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே.’

(அக-120)
 

பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது.
 

நெய்தற்கு எற்பாடு வந்தது5
  

’கானன்     மாலைக்  கழிப்பூக்  கூம்ப’  என்பதனுள்   மாலையும்  வந்தது.  கலியுள்  மாலைக்காலம்
நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இதுமேல் ‘நிலனொருங்கு மயங்குதலின்று’ (12) என்பதனாற் பெறுதும்.
  

இவற்றிற்கு  அறுவகை  இருதுவும்  உரிய  வென்பதன்றிக்  காரும்  இளவேனிலும்  வேனிலும் பெரும்
பொழுதாகக்கொள்ப. என்றற்குப் பொருள்பெறத் தோன்றும் என்றார்.
  

இனி  நெய்தற்கு  ஒழிந்த  மூன்று  காலமும்  பற்றிவரச்  சான்றோர் செய்யுட் செய்திலர்: அக்காலத்துத்
தலைவி புறம் போந்து விளையாடாமையின் அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க.
  

“கழனி மாஅத்து வினைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூர
னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கு
மாடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.”

(குறு-8)
  

இது குறுந்தொகை6.


5. ஞாயிறு  எல்(வெயில்)லைப்  பைப்பயக்கழிப்பிகுட  வரைக்கல்  சேர்ந்தன்று என்பதால் எற்பாடு
கொள்க.
  

6. இதில் பொழுது கூறப்படவில்லை.