புறனுரைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினார் கேட்ப உரைத்தது. |
“அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை யரம் போ ழவ்வளைப் பொலிந்த முன்கை யிழையணிப் பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தன் பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியினையின் முகனமர்ந் தாஅங் கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் றாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம் மிளமை சென்று தவத்தொல் லஃதே யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே.” |
(அகம்-6) |
பரத்தையொடு புனலாடி வந்தமை கேட்டுத் தலைவி புலந்தது. |
இது இளவேனில் வந்தது7 ஏனைய வந்தவழிக் காண்க. |
நாடக வழக்கானன்றி உலகியல் வழக்கானும் அச்சிறுபொழுதும் அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் |
7. காவிரியில் பரத்தையொடு புனலாடுதல் கூறினமையால் அவ்வாறு ஆடுதற்குரிய இன்பக்காலம் இளவேனில் ஆகலின் அது கூறப்பட்டது என்க. |