பக்கம் எண் :

76தொல்காப்பியம் - உரைவளம்

மலும்     சூத்திரிக்கும்  ஆசிரியர்   முறையிற்  பொருத்தம்   காணும்   முனிவரவர்கள்   மருதத்திணை
யொன்றற்குச்   சிறுபொழுதிரண்ட   மைத்தலில்   பொருந்தாப்  பெருந்தவறு  காணுதற்குரிய  நியாயத்தை
விளக்கினார்களுமில்லை.  இனி,  பிற்றைய   நாற்கவிராச  நம்பியார்   சிறுபொழுதைந்தென்று  கூறுதலால்,
பண்டைப்  புலவர்  பாட்டுகளைப்   பொய்யாக்கித்   தொல்காப்பியர்   சூத்திரங்களுக்கும்   புதுப்பொருள்
காண்பது உரையறமாகாது. மேலும் வைகறையும்  விடியலும்  மருதத்திணையான  ஊடலுக்கு உரித்தாமாறும்,
மாலையையும்  யாமத்தையும்  பரத்தையர்  வீட்டிற்கழித்த  தலைவன் தன்  மாட்டு  மீட்டு வரும் வைகறை
விடியற்காலங்களில்   தலைவி   அவனோடூடுதல்   இயல்பாவதும்,  பிறகு   பொழுதேறி   விருந்தினர்க்கு
வேளாண்மை  செய்தலால்  ஊடல்  தீர்தல்  முறையென்பதும்,  மருதக்கலி நெய்தற்கலி முதலிய பண்டைய
அகத்துறைப் பாட்டுகளால் இனிது விளங்கும்.
  

“ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
எனும் குறளால்
  

ஊடுமிடத்தெல்லாம்    கூடுதலின்றியமையாமை  பெறுதற்கில்லை.  ‘கூடியமுயங்கப்பெறின்’ அதற்கின்பம்
என  வள்ளுவர் விதந்து கூறுதலாலேயே,  ஊடுந்தொறும்  உடனே  கூடல் ஒருதலையாகாது. கூடப் பெரும்
பொழுதுகளும்  உளவாதல்  இயல்பென்பது  பெறப்படும். அன்றியும்,  ஊடல்  அதன்பின்  கூட நேர்ந்துழி;
அக்கூட்டத்திற்கு  இன்பம்  மிகுக்கும்  என்பது  இக்குறட்  பொருள்  ஆவதன்றி உடனே கூட நேராப்
பொழுதுதெல்லாம் ஊடல் நிகழாது என்பது கருத்தாகாமை வெளிப்படை. இனி,
  

“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்”

  

எனும்  அள்ளூர் நன்முல்லையாரின்  குறுந்தொகைப்  பாட்டில்  காலையும்  விடியலும் வேறாக்கி விரிகதிர்
விடியலைக்  காலையென்றபின்   வைகறையை   விடியலென்று   கூறியதனால்,  வைகறையின்  வேறுபட்ட
விரிகதிர் விடியலும் பகலிறுதியின் எற்பாடும் உண்டெனப் பண்டைப் புலவரின் பல பாட்டுகள்