பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.9, 1077

கூறுவதை   மறுக்கவொண் ணாது.  அதுவேபோல்  அப்பாட்டில் எற்பாடு  கூறப்பெறாமை கொண்டு ‘பகல்
மாய்ந்திப்படு   சுடர்ப்’   பொழுதான   எற்பாடு     இல்லையெனலும்    இயலாது.   கூறப்பட்டதொன்று
உண்டெனலாமன்றிக்  கூறப்பெறாமை   கொண்டு  உள்ளதொன்றை   இல்லையெனத்  துணிதற்கு அளவை
நூலிடந்  தராது  மேலும். இப்பாட்டினடிகளில் சொற்றோறும்  வருகின்ற   உம்மை  எண்ணும்மையேயாகும்.
‘என்று  இப்பொழுதைந்தும்’ என  முற்றும்மை  பெறாமையானும்  சிறுபொழுதைந்தேயாம்  என்னுமுடிவிற்கு
இக்குறுந் தொகைப் பாட்டடிகள் இடந்தராவாம்.
  

எவ்வாற்றானும்     பண்டைச் சான்றோர்  பாட்டுபலவற்றுள்ளும்  வைகறையும்  விடியலும்   இருவேறு
சிறுபொழுதுகளாமென விதந்து  கூறப்  பெற்றிருத்தலானும், இச்சூத்திரத்தில் வைகறையையும்  விடியலையும்
கூறி  அவற்றின்  வேறாயஎற்பாடும்  கூறப்பெறுதலானும்,  இரவுக்குச்   சிறுபொழுது   மூன்றாவது  போல்
பகலுக்கும்  சிறுபொழுது  உண்மையானும்,  ஈண்டு   வைகுறு, விடியல், எற்பாடு  என்பன  மூன்றும்முறையே
கங்குலிறுதிப்  பொழுதான  வைகறையும், வெயிலோடு விரிகதிர் விடியலான பகல்  முதற்  சிறுபொழுதாகிய
காலையும்     மருதத்துக்கும்,     பகலிறுதியில்    சுடர்படும்   பொழுதான   எற்பாடு   நெய்தலுக்கும்
சிறப்புறவருமெனும்      உரையே      உண்மையுரையாமெனத்      தெளிதலெளிதாம்.       அதனால்
நச்சினார்க்கினியரொடு   இளம்பூரண   அடிகளும்    இதுவே    இச்சூத்திரப்    பொருளாகக்   கூறுதல்
அமைவுடைத்தாகும்.
  

1. விடியல் அல்லது காலை மருதப்பொழுதாதற்குச் செய்யுள்:-
  

காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
தெறுவதம்ம இத்திணைப் பிறத்தல்லே.

(குறுந்-45)
 

“நிரைதார் மார்பன் நெருந லொருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
..............................................................................
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தோ