பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.1179

இல.வி.அ. 14.
  

வேனில் நண்பகல் பின்பனி என்றிவை
பான்மையின் உரிய பாலைக் கேற்றலும்

முத்து. அக.19.
  

நண்பகல் வேனில் நடுத்திணைக் குரிய
  

இளம்பூரணர்
  

11. நடுவுநிலைத் ... ..........நெறித்தே.
 

இது, பாலைக்குக் காலமும் இடனும் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  நடுவு நிலைத்திணை - நடுவு நிலைத்திணையாகிய பாலையாவது, நண்பகல் வேனிலொடு முடிவு
நிலை  மருங்கின்  முன்னிய  நெறித்து  - நண்பகற்பொழுது  வேனிற்  காலத்தொடு  புணர்ந்து நின்றவழிக்
கருதிய நெறியை உடைத்து.
  

இஃது  இளவேனில்  முதுவேனில்  என்னும்  இருவகைப் பருவத்தின் கண்ணும் வரும் நண்பகற்பொழுது
காலமாம் என்பதூஉம், ஆண்டு இயங்கும் நெறி நிலமாம் என்பதூஉம், உணர்த்தியவாறு.
  

இளவேனிலாவது  சித்திரைத்  திங்களும்   வைகாசித்திங்களும்,  முதுவேனிலாவது  ஆனித்  திங்களும்
ஆடித்திங்களும். நண்பகலாவது பகற்பொழுதின் நடுக்கூறு.
  

நச்சினார்க்கினியர்
  

9. வைகறை விடியல் மருதம்
 

இது   நிலனுடைய   நான்கற்குங்  காலங்   கூறி  அந்நான்கற்கும்  பொதுவாகிய  பாலைக்குக்  காலங்
கூறுகின்றது.
  

இதன் பொருள் :- நடுவுநிலைத்திணையே  -  பாலைத்திணை,  நண்பகல்  வேனிலொடு  - எற்பாடுங்
காலையும்  என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு  கூறு  தான்  கொண்டு வெம்மை செய்து பெருகிய
பெரும் பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும்  இரண்டினோடும்,  முடிவு  நிலை மருங்கின்பிரி