பக்கம் எண் :

பின்பனி தானும் உரித்துஎன மொழிப சூ 1287

பாலைப்     பொருளாவது பிரிவு  அப்பிரிவின் கண்  தலைமகற்கு வருத்தம் உறும் என்று  தலைமகள்
கவலுங்கால்,  நிழலும்  நீரும்  இல்லாத  வழி ஏகினார் எனவும்  கவலு  மாகலின்,  அதற்கு அது சிறந்தது
என்க.
  

நச்சினார்க்கினியர்                                                              12
  

10. பின்பனிதானு. . . . . . . . . .மொழிப
  

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி
  

இதன் பொருள் :- நடுவுநிலைத்திணைக்கு   முற்கூறியவேனிலன்றிப்   பின்   பனிக்காலமும்   உரித்து
என்றவாறு,
  

இது  கூதிரை  முன்பனியாகிய மார்க்கழியுந் தையுந் தொடர்ந்தாற்போல,  வேனிலாகிய சித்திரை முதலிய
நான்கற்கு பின்பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்த தென்று கூறினார். 
  

உதாரணம் :-
 

“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டோர் மிசையவர்
வகை கொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.”

(கலி-31)
 

இது, தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றலரிது
  

இஃதெவர்க்கும் ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடு வேனெனவுங் கூறிற்று.
  

“அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற்றண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியு நாளும் பலவா கவ்வே”

(குறு.104)
 

தலைவி தோழிக்கு உரைத்தது.
  

இக் குறுந்தொகையும் அது.
  

பின்பனிக்கு  நண்பகல்  துன்பஞ்செய்யா  தென்பதூஉம் அதற்குச் சிறுபொழுது  வரைவில் வென்பதூஉங்
கூறிற்று; என்னை? சூத்திரத்துத் ‘தான்’ எனத்தனித்து வாங்கிக் கூறினமையின்.