பாலைப் பொருளாவது பிரிவு அப்பிரிவின் கண் தலைமகற்கு வருத்தம் உறும் என்று தலைமகள் கவலுங்கால், நிழலும் நீரும் இல்லாத வழி ஏகினார் எனவும் கவலு மாகலின், அதற்கு அது சிறந்தது என்க. |
நச்சினார்க்கினியர் 12 |
10. பின்பனிதானு. . . . . . . . . .மொழிப |
இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி |
இதன் பொருள் :- நடுவுநிலைத்திணைக்கு முற்கூறியவேனிலன்றிப் பின் பனிக்காலமும் உரித்து என்றவாறு, |
இது கூதிரை முன்பனியாகிய மார்க்கழியுந் தையுந் தொடர்ந்தாற்போல, வேனிலாகிய சித்திரை முதலிய நான்கற்கு பின்பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்த தென்று கூறினார். |
உதாரணம் :- |
“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டோர் மிசையவர் வகை கொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.” |
(கலி-31) |
இது, தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றலரிது |
இஃதெவர்க்கும் ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடு வேனெனவுங் கூறிற்று. |
“அம்ம வாழி தோழி காதலர் நூலறு முத்திற்றண்சித ருறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியு நாளும் பலவா கவ்வே” |
(குறு.104) |
தலைவி தோழிக்கு உரைத்தது. |
இக் குறுந்தொகையும் அது. |
பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம் அதற்குச் சிறுபொழுது வரைவில் வென்பதூஉங் கூறிற்று; என்னை? சூத்திரத்துத் ‘தான்’ எனத்தனித்து வாங்கிக் கூறினமையின். |