10. பின்பனி. . . . . மொழிப |
பாரதியார் |
கருத்து :- இது பிரிவுக்குப் பின்பனியும் உரித்தாதல் கூறுகிறது. |
பொருள் :- (முதிர்வேனிலேயுமன்றி) பின்பனிக்காலமும் பிரிவு சுட்டும் பாலைத்திணைக் குரித்தாகுமென்று கூறுவர் (புலவர்) பின்பனி பிரிவுப் பருவமாதல், பின்வரும் ஆலத்தூர் கிழாரின் குறும்பாட்டிற் காண்க. |
“அம்ம, வாழி, தோழி! முன்னின்று ‘பனிக்கடுங் குரையம், செல்லாதீ’ மெனச் சொல்லின மாயிற் செல்லார் கொல்லோ? ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ ஆறுசெல் லம்பலர் படைதலை பெயர்க்கும் மலையுடைக் கானம் நீந்தி நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசி னோரே.” |
(குறுந்-350) |
பின்பனிப் பிரிந்தோர் இளவேனிலிற் கூறுவதற்குச் |
செய்யுள்:- |
“கோங்கங் குவிமுகை யவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கு முற்றா வேனின் முன்னிவந் தோரே.” |
(நற்-86) |
“...........புணர்மினோ என இணமிசைச் செங்க னிருங்குயி லேதிர்குரல் பயிற்று மின்ப வேனிலும் வந்தன்று.” |
(நற்-224) |
என்னும் பெருங்கடுக்கோவின் நற்றிணைப் பாட்டடிகளும் பிரிந்த காதலர் திரும்பக்கூடும் “காமர் வேனின்மன் இது” என்னும் அகப்பாட்டடியும். |
“ஊடீனீ ரெல்லா முருவிலான் நன்னாணை கூடுமி கனன்று குயில் சாற்ற - நீடிய வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக் கானற்சா ணிக்கலந்தாய் காண்.” |