21

முல்லையின் கருப்பொருள்

22. நெடுமால் குறும்பொறை நாடன் றோன்றல்
1வடுவில் கற்பின் மனைவி கிழத்தி
இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்
கான வாரண மான்முயல் பாடி
குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை
நிறங்கிளர் தோன்றி பிறங்கலர்ப் பிடவம்
கொன்றை காயா மன்றலங் குருந்தந்
தாற்றுக்கதிர் வரகொடு சாமை முதிரை
ஏற்றுப்பறை முல்லை யாழ்சா தாரி
சாமை வரகு2 தரமுடன் வித்தல்
அவைகளை கட்டல் அரிதல் கடாவிடல்
செவிகவர் கொன்றைத் தீங்குழல் ஊதல்
மூவின மேய்த்தல் சேவினந் தழுவல்
கழுமிய குரவையொடு கான்யா றென்றிவை
முழுதுட னாடன் முல்லைக்கருப் பொருளே.

(இ - ம்.) நெடுமால் முதலாகக் கான்யாறாடல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாம் முல்லைக் கருப்பொருளாம் என்றவாறு.

(22)

மருதத்தின் கருப்பொருள்

23. இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்
கெழுதகு கற்பின் கிழத்தி மனைவி
உழவர் உழத்தியர் கடையர் கடைச்சியர்
மழலை வண்டான மகன்றில் நாரை
அன்னம் போதா நன்னிறக் கம்புள்
குருகு தாரா எருமை நீர்நாய்


(பாடம்) 1. 'மடியில் கற்பின்'

2. 'தாமுடன் வித்தல்.'