நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை யயர்தல் வேண்டிப் புதுவதின் இயன்ற வணியன் இத்தெரு விறப்போன் மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும் பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர் தாங்குமதி வலவவென் றிழிந்தனன் றாங்காது மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப் புல்லிப் பெரும செல்லினி யகத்தென கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு தானே புகுதந் தோனே யானது படுத்தனெ னாகுத னாணி யிடித்திவன் கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென் றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண் டிமிழ்கண் முழவி னின்சீர் அவர்மனைப் பயிர்வன போலவந் திசைப்பவுந் தவிரான் கழங்கா டாயத் தன்றுநம் அருளிய பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ வயர்ந்ததன் மணனே." எனவும் வரும். தலைவி தலைவனைப் புகழ்தற்குச் செய்யுள்: 1"கொண்டானிற் றுன்னிய கேளிர்மற் றில்லை குறிப்பினென்று தண்டா தவர்சொன்ன சால்புகண் டேன்றல மேழ்புரக்கும் வண்டார் மலர்ப்பயன் வாணன்றென் மாறை மகிழ்நர்முன்னாள் உண்டா கியபழங் கேண்மையிந் நாளு மொழிந்திலரே." என வரும். பாங்கி மனைவியைப் புகழ்தற்குச் செய்யுள்: 2"சிறந்தார் புகழ்தருந் தீம்புன லூரன் செய் தீமையெல்லா மறந்தார்வ மெய்தி வணங்குத லாலிவள் வாணன்றஞ்சை நிறந்தா ரகையன்ன நித்திலம் போலு நெடுங்குலத்திற் பிறந்தார் நிறைந்தகற் போர்வடி வேபெற்ற பெற்றியளே." எனவும், 3"யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய
1.. த. கோ. செ : 406.
2. த. கோ. செ : 407. 3. குறு. செ : 9.
|