63

1"வண்டே யிழையே வள்ளி பூவே
கண்ணே யலமர லிமைப்பே யச்சமென்
றன்னவை பிறவு 2மாங்கணிகழ் கின்ற
ஐயங் களையுங் கருவி யென்ப"

என்றாராகலின், அதற்குச் செய்யுள்:

3"மையார் குவளை வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
நையா தொழிமதி நன்னெஞ்ச மேயினி நம்மினுந்தன்
நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலவுண்கண்
கையா லழைப்பன போலிமை யாநிற்குங் காரிகைக்கே"

எனவும்,

4"திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயு-மரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கும்
ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே"

எனவும் வரும்.

(5)

குறிப்பறிதல்

122. அரிவை நாட்ட மகத்துநிகழ் வேட்கை
தெரிய வுணர்த்துங் குரிசிற் கென்ப.

(இ - ம்.) குறிப்பறிதற்கு ஏது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகளுள்ளத்து நிகழாநின்ற வேட்கையினைத் தலைமகற்கு விளங்க அறிவிக்கும் அவள் கண் என்றவாறு.

என்னை?

5"நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்"

என்றாராகலின். அதற்குச் செய்யுள்:-


1. தொல், பொருள், களவியல், சூ: 4.

2. 'ஆங்கவ ணிகழ, நின்றவைகளையும்' என்பது தொல்காப்பியத்தில் உள்ள பாடம்.

3. த. கோ. செ. 3

4. பு. வெ. கை. ப. செ. 3.

5. தொல், பொருள், களவியல், சூ: 5.