xiv
 

நூற்பா 

பழைய உரைகளின்

இவ்வுரை கொள்ளும்

எண் 

பாடம் 

பாடம்

 

1. 

எழுத்தெனப் படுப எழுத்தெனப் படுவ

16. 

எகர ஒகரத் தியற்கையும் அற்றேஇகரஉகரத்தியற்கையும் அற்றே

33.

உளவென மொழிபஉளவென மொழிவ

39.

ஈறியல் மருங்கின்ஈரியல் மருங்கின்

102.

அளவு நுவன்றிசினேஅளபு நுவன்றிசினே

112.

புணர்மொழி நிலையும்பொருள்மொழி நிலையும்

132.

ஒடுவயின் ஒக்கும்ஒருவயின் ஒக்கும்

140.

உடம்படு மெய்யின் உருவுஉடம்படு மெய்என் உருபு

152.

ஞநமவ என்னும்ஞநம என்னும்

211.

செயவென் கிளவிசெய்கென் கிளவி

288.

அத்தொடுஅத்தொடும்

342.

இறுதியொடு உறழும்மிகுதியொடு உறழும்

359.

மகன்வினைஅதன்வினை

472.

ஈறுசினை ஒழியஈறுசினை ஒழியா

இப்புதிய  பாடங்களில்  பலவும்  இவ்வுரையாசிரியர்   நூற்பாக்களைப்
பலகாலும்  கூர்ந்து  நோக்கி  மெய்ப்பொருள்  காணும் திறத்தில் கொண்ட
முயற்சியை  வெளியிடுவனவாம்.  இவற்றின்  நலன்களை உரிய இடங்களில்
நோக்குவோம்.
 

சிறப்புப்பாயிரம்:-
 

இதனுள்   பாயிரம்   என்பதன்   பொருள்    முதலில்    ஆராய்ந்து உரைக்கப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகம், எழுத்தும் சொல்லும் பொருளும்
நாடி,   செந்தமிழியற்கை   சிவணிய   நிலத்தொடு   முந்து   நூல்கண்டு,
மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி - என்ற தொடர்களுக்குப் பிறர் கூறிய
உரைகளை மறுத்து  இவ்வாசிரியர் தரும்  விளக்கம்  பொருள்  செறிந்தது.
நான்மறை,   ஐந்திரம்   இவைபற்றிய   ஆய்வுரை    சுவை   நிறைந்தது.
தொல்காப்பியன் என்ற  பெயர்பற்றிய ஆராய்ச்சி   ஊன்றி நோக்கத்தக்கது.
இப்பாயிர உரை இவ்வுரையாசிரியரின் இலக்கணப் புலமையைப்  பட்டாங்கு
அறிதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகிறது.
 

நூன் மரபு:-
 

‘எழுத்தெனப்படுவ’  படுவ பலவின்பால் வினைமுற்றுப்பெயர். ஆசிரியர்
தொல்காப்பியனார், ‘‘அஆ வஎன வரூஉம் இறுதி