நூன்மரபு91

எ - டு:   வண்டு-வெண்சாந்து, வெண்ஞாண்,   நண்பன்,   உண்மை,
மண்யாப்பு-கண்விழி  எனவும்,  புன்கம்-நன்செய்,  வின்ஞாண்,   அன்பன்,
நன்மை, மென்யாழ், பொன்வளை எனவும்  வரும். இவற்றுள்  வெண்சாந்து
என்றாற்போல   இருசொல்லாக      உள்ளவை     தொகைமொழிகளாம்.
முரண்டேய்ந்தது  - மன்னன்றேறினான்  -  இறைவன்   செயல்    எனப்
புணர்மொழியுள்ளும் கண்டுகொள்க.
 

சூ. 27:

ஞநமவ என்னும் புள்ளி முன்னர்

யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே

(27)
 

க-து:

ஞநமவ என்பவற்றின்முன் யகரம் மயங்குமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஞநம  என்னும்  மெல்லெழுத்தின்  முன்னும்  வ என்னும்
இடையெழுத்தின் முன்னும் யகர (உயிர்)  மெய்வந்து அவற்றின் ஓசையொடு
மயங்குதல் பொருளுடையதேயாம்.
 

மெய்யென்றது பொருளை. ஈண்டுப் பொருளாவது மயக்க இலக்கணமாம்.
இம்மயக்கம் தனிமொழிக்கண் நிகழாவாதலின்  அதுகருதி ஐயுறற்க என்பார்
‘‘மெய்பெற்றன்றே’’  என்றார்.  இதனானும் மயக்க  இலக்கணம் தனிமொழி
தொடர்மொழி என்னும் நியதியின்றி வரும் என்பது புலப்படும்.
 

எ - டு:   உரிஞ்யானை - பொருந்யாக்கை - திரும்யாடு  - தெவ்யாழ்
எனத்  தொகைமொழிக்கண்ணும்,   உரிஞ்யாது,   வெரிந்யாது,  சுரம்யாது,
தெவ்யாது எனப் புணர்மொழிக்கண்ணும் வரும்.
 

சூ. 28:

அவற்றுள்

மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் 

(28)
 

க-து:

மகரத்தின்முன் வகரமும் மயங்கும் என்கின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்  மகரப்புள்ளியின்முன்    யகரமேயன்றி
வகர (உயிர்) மெய்யும் வந்து மயங்கும்.
 

வகரம் வந்து மயங்குங்கால்  மகரம்  தன்  ஒலிகுன்றி  உட்பெறுபுள்ளி
மகரமாகும் என்பதனை ‘‘வகார மியையின்  மகாரம் குறுகும்’’ என்பதனான்
அறிக.  இதனானும்   மயக்கம்    என்பது    தனி  எழுத்தொலி  பற்றிய
ஆராய்ச்சியே என்பது புலனாகும்.
 

எ - டு :  திரும்வாழ்வு (திரும்பும்  வாழ்வு) என்பது  வினைத்தொகை
மொழி.  தரும்வளவன்  -  நிலம்  வலிது  எனவரும். இவை புணர்மொழி.
இம்மயக்கமும் தனிமொழிக்கண் நிகழாதென அறிக.