நூன்மரபு95

இங்ஙனம்  வந்து   இணைந்த   மெய்கள்   திண்ணிதாய்  ஒலிப்பதை
மகன்-மக்கள்   என்னும்   சொற்கண்   உள்ள   ககரங்களை    ஒலித்து
வேறுபாட்டினை உணர்க. ரழக்கள் வளைநா அண்ண  இடையிற்  பிறக்கும்
வருடொலிகளாதலான் அவை  ஊன்றுதலின்று,  அதனான் அவை தம்முன்
தாம்வாராவாயின.
 

இனி,  உரையாசிரியன்மார்  இச்சூத்திரங்களான்   கூறப்பட்ட  விதிகள்
மொழியின்கண் எழுத்துக்கள் இணைந்து  வருமிடத்து எந்த மெய்யின் பின்
எந்த மெய்வரும் என வரையறை கூற வந்தனவாகக் கொண்டு, வேற்றுநிலை
மெய்ம்மயக்கம்   உடனிலை   மயக்கம்   எனத்தாமே   வகுத்துக்கொண்டு
விளக்கங்கூறினர்.   நச்சினார்க்கினியர்  உரையாசிரியரொடு   முரண்பட்டுக்
கூறுவர். மொழிக்கண் எழுத்துக்கள்  நிற்குமாற்றை ஆசிரியர் மொழிமரபின
கண்ணே, தெளிவாகக் கூறுதலை ஓராராய் அவர் கூறியனவே  வழக்காறாய்
அமைந்து, தமிழ்  எழுத்துக்களின்  ஒலியமைப்பின்  நுட்ப இலக்கணத்தைப்
பற்றியவை இவையென அறிய இயலாமற் செய்துவிட்டது.
 

இதுகாறும் கூறியவாற்றான் வல்லெழுத்து மெல்லெழுத்து  இடையெழுத்து
எனக்கூறுபவாயினும் அம்மூவாறும்  வழங்குமிடத்துப்   புள்ளியாக  நிற்கும்
மெய்யின் முன் உயிர்மெய்யாகவரும்  மெய்  ஒலிமாற்றம்   எய்துமென்றும்,
ஒலியழுத்தம்    பெறுமென்றும்,    எழுத்தொலி    பற்றிய  இலக்கணமே
கூறப்பட்டதென்பது தெளிவாகும்.
 

சூ. 31:

அ இ உஅம் மூன்றும் சுட்டு

(31)
 

க-து:

உயிர்க்குற்றெழுத்துள் மூன்றற்குச் சிறப்புக் குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:அஇஉ   என்னும்     அம்மூன்று     உயிரெழுத்துக்களும்
சுட்டுதற்குரியவாதலின் சுட்டு என்னும் பெயரான் வழங்கப்படும்.
 

குறியீடு  வழங்குதற்   பயத்ததாகலின்   எழுத்துக்கட்கு  உயிர்என்றும்
புள்ளிஎன்றும்  பெயரிட்டுப்,  பின்னர்க்  குறில்-நெடில்,  வலி-மெலி-இடை
என்றும் குறியீடு செய்து வழங்குதல் போலப்  பின்னர் ஆளுதற் பொருட்டு
ஈண்டுக் குறியீடு செய்தார் என்க.
 

எ - டு :

“வஃகான் மெய்கெடச் சுட்டுதல் ஐமுன்” (புண-29)

“சுட்டுமுத லாகிய இகர இறுதியும்” (தொகை-17

“சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி” (உருபு-4)

“சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்” (விளி-31)
 

எனப் பின்னர் வழங்குதல் காண்க.
 

எகரம் ‘‘எவன்’’ என்னும் வினாவினைக்  குறிப்புச்சொற்கு உறுப்பாகவும்
எஞ்சாப் பொருள்தரும் இடைச்சொல்லாகவும்