‘‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லபிற’’ என்பதனுள் உள்ள ‘‘அறிந்த’’ என்பது போல ஈண்டு அறிந்த என்பது அறிதற்குரிய என்னும் பொருள்பட நின்றது. ‘‘புணரியலான’’ என்பது ஏதுப்பொருட்டாய ஆனுருபு ஈறு திரிந்து நின்றது. வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரமே குறுகும் என்பது குற்றியலுகரப் புணரியலுள் பெறப்படும். |
எ - டு :கொக்குக்குறிது - கச்சுச்சுருக்கம், பத்துத்துடி - செப்புப்புதிது எனவரும். |
இனி நாகுகால், பரிசுப்பொருள், எஃகு சிறிது - உல்குபொருள் - அன்புச்சொல் என்பனவும் ; கொக்குப்பெரிது, கச்சுக்குறிது எனவருமொழி வல்லெழுத்துப் பிறிதாகி வருமிடத்தும் குறுகாது என்க. |
‘‘கடப்பாடறிந்த’’ என்றதன்கருத்தாவது:- குற்றியலுகரம் தனிமொழியைவிடப் புணர்மொழிக்கண் திரிபின்றிப் புலனாகும் என்பதாம். அஃதாவது, ‘நோக்கு’ என்னும் சொல் தனித்து நிற்பின் அது பெயராயும் முதனிலை ஏவலாயும் கொள்ளற்கு உரியதாகும். பெயராக நிற்குமிடத்து இதழ் சிறிது குவியக் கூறுங்கால் குற்றியலுகரமாகவும், நன்கு குவியக் கூறுங்கால் முற்றியலுகரமாகவும் நிற்கும். |
| ‘‘இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு |
| நோய்நோக்கொன் றந்நோய் மருந்து’’ |
என்புழி, நோக்கு என்னும் சொல் |
தனித்து நிற்புழி ஒரு மாத்திரையாக நிற்பதனையும் இருநோக்கு நோய் நோக்கு என்பவை வருமொழி நோக்கிக் குற்றியலுகரமாயே நிற்பதனையும் காண்க. |
குற்றுகரக் குறுக்கத்தை உணர்த்தும் சூத்திரம் குற்றியலுகரப் புணரியலுள் “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே” என்பதாகும். (409) |
சூ. 38: | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி |
| உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே |
(5) |
க-து: | ஆய்த எழுத்து மொழிக்கண் சார்ந்து வருமாறு கூறுகின்றது. |
பொருள்:முப்பாற்புள்ளி என்ற ஆய்த எழுத்து; குற்றெழுத்தின் முன்னர்த்தாய் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறற்கும் மேலதாய் வரும். |