முடியும்  விகார  எழுத்துக்கள்   என்ற   செய்தி   உய்த்துணர  வைக்கப்
பட்டதனைச் சுட்டியுள்ளார். நூ.47: மானம் என்ற  சொற்பொருள்  விளக்கம்
கண்டுணரத்தக்கது. நூ.48: ஈரொற்றுடனிலை ஒரு சொற்கண் வருவதேயாகும்
என்பதும் ஈரொற்று, மொழியின்  இடைநிற்கும்  ஈரொற்றுக்களே  என்பதும்
தெளிவுறுத்தப்பட்டுள்ளன. நூ.52:  ஒரு  மொழியுள்  மெல்லினமே  மகரங்
குறுகுதற்குச் சார்பு  என்ற நுணுக்கமான செய்தி இயம்பப்பட்டுள்ளது. நூ.53:
‘மொழிப்படுத்திசைத்தல்’ விரிவாக  விளக்கப்பட்டுள்ளது. நூ.54, 55: மொழி
முதற்கண்  வரும்  மாற்றெழுத்துப்  பற்றியன. நூ. 56, 57: மொழியிடையில்
வரும்  மாற்றெழுத்துப்  பற்றியன.  நூ. 58:  மொழி   இறுதிக்கண்  வரும்
மாற்றெழுத்துப்  பற்றியது   என்ற   செய்திகள்    விரிவான   விளக்கம், எடுத்துக்காட்டுக்கள், கடா விடைகள் முதலியவற்றான்  விளக்கப்பட்டுள்ளன.
நூ. 59: ஓரெழுத்தொரு மொழி என்பது கசடற விளக்கப்பட்டுள்ளது. நூ. 60:
‘உயிர்மெய்  யல்லன  மொழிமுத  லாகா’  என்ற  இந்நூற்பா  உரையிலும்
ஆசிரியர் மெய்,  புள்ளி,  உயிர்மெய்  என்பன பற்றித் தாம் கொண்டுள்ள
கொள்கையை நிறுவுகிறார். நூ. 68: ஒரே  சொல்  குற்றியலுகர ஈற்றதாகவும்
முற்றியலுகர ஈற்றதாகவும் பொருள் வேறுபாட்டோடு  வரும்  செய்தி நன்கு
விளக்கப்பட்டுள்ளது.  நூ. 79, 80, 81:  ஞகர  நகர  வகர  ஈற்றுத்  தமிழ்ச்
சொற்கள் வரையறுக்கப் பட்டதன் காரணத்தை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
 

பிறப்பியல்:-
 

நூல்.83.  இந்நூற்பாவில் எழுத்தொலித்தோற்றம் பற்றிய இன்றியமையாத
பல  நுணுக்கமான  செய்திகளையும் இயம்பியுள்ளார். நூ. 101: ‘ஒத்த காட்சி’
என்ற தொடர்  ஐயமற  விளக்கப்பாட்டுச்  சார்பெழுத்தின்  தோற்றத்தைத்
தெளிவாக்குகிறது. நூ. 102:  அகத்தெழு  வளியிசை  அந்தணர்  மறைத்தே,
மெய்தெரி வளியிசை என்ற தொடர்களை விளக்கும் வாயிலாகப் பண்டைத்
தமிழகத்தில்   வாழ்ந்த      நிறைமொழி     மாந்தரின்    பேராற்றலை எடுத்தியம்புகிறார்.   அளபு     என்பதே    மாத்திரையைக்    குறிக்கும் சொல்லாதலின் அளவு என்ற பாடத்தை விடுத்து அளபு என்ற பாடத்தையே
கொண்டுள்ளார்.
 

புணரியல்:-
 

நூ. 105: குற்றிய  லுகரமும்  அற்றென  மொழிப என்பதன் விளக்கவுரை
இனிது.   நூ.107:   நிலைமொழி   வருமொழி   என்னாது   நிறுத்தசொல்
குறித்துவருகிளவி என்று தொல்காப்பியனார்