குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும் என்றதனான், அது பொருள் பயவாது என்பது பெறப்படும். அதனான் நெட்டெழுத்தின் ஓசையொடு குற்றெழுத்தின் இசையைச் சேர்த்து நீட்டிக்கொள்க என்பது கருத்தாதல் உணரப்படும். எழுத்தென்றது ஒலிஉருவை. வரிவடிவின்கண் அடையாளமாக அமையும். |
எ - டு: | ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
| ஆஅதும் என்னு மவர் (குறள்-365) எனவரும். |
தமிழ்மொழியில் மூன்று மாத்திரை நான்கு மாத்திரை எழுத்துக்கள் வகுக்கப்படாமையின் ஒத்த குற்றெழுத்து இசை நிறைக்கும் என்றும், இங்ஙனம் அளபெடுப்பது நெட்டெழுத்தே என்றும் அறிவிக்க ‘நெட்டெழுத்திம்பர்’ என்று கூறினார். |
ஒத்த குற்றெழுத்து என ஈண்டு ஒருமைவாய்பாட்டாற் கூறி நூன்மரபின்கண் “அவ்வளபுடைய கூட்டி எழூஉதல்” என்றதனான் குற்றெழுத்தின் ஓசை ஒவ்வொன்றாக இணைந்திசைக்கும் என்பதும் அவ்வாறே வரிவடிவம் எழுதிக் கொள்ள வேண்டுமென்பதும் உய்த்துணரவைத்தார். |
எ - டு: | உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்க் கடலைச் |
| செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள். 1200) எனவரும். |
இயற்றமிழ்ச் செய்யுட்கண் நான்கு மாத்திரையினும் ஓர் எழுத்துமிகாது என்க. |
சூ. 42: | ஐ ஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு |
| இகர உகரம் இசைநிறை வாகும் |
(9) |
க-து: | ஐகார ஒளகாரங்கள் அளபெடுக்கும் முறைமை கூறுகின்றது. |
பொருள்: இனக்குற்றெழுத்தில்லாத ஐகாரம் ஒளகாரம் என்னும் அவ்இரண்டெழுத்திற்கு முறையே இகரமும் உகரமும் ஒத்த குற்றெழுத்தாய் இசைநிறைவு செய்யும். |
மேல்நூற்பாவில் ஒத்த குற்றெழுத்து என விதந்தமையான் இனக்குற்றெழுத்தில்லாத ஐகார ஒளகாரங்களைப்பற்றி எழும் ஐயம் நீங்க இகர உகரம் இசை நிறைவாகும் என்றார். அதனான் இவ்இரண்டு உயிரெழுத்துக்களும் அகரத்திற்றொடங்கி முறையே இகர உகரங்களாகி முடியும் விகார எழுத்துக்கள் என்பதை உய்த்துணரவைத்தார் என்க. |
எ - டு: | ஐஇ-கைஇ எனவும் ஒளஉ - வௌஉ எனவும் வரும். |