இன்னும் இதனானே ஒவ்வோரெழுத்தையும் கூறுமிடத்து எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்தல் என்னும் கருத்தாவின் முயற்சியான் வேறுபடுதலையும் கண்டு கொள்க. |
சூ. 89: | ககார ஙகாரம் முதல்நா அண்ணம் |
(7) |
க-து: | மெய்களுள் இரண்டற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்: ககாரம் ஙகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் அடிநா அடிஅண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும். |
‘உற’ ‘இயலும்’ என்பவை மேலைச்சூத்திரத்தினின்று அதிகரித்தன. பின்வரும் இரண்டு சூத்திரங்கட்கும் இஃதொக்கும். |
சூ. 90: | சகார ஞகாரம் இடைநா அண்ணம் |
(8) |
க-து: | இதுவுமது. |
பொருள்: சகாரம் ஞகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் இடைநா இடை அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கும். |
சூ. 91: | டகார ணகாரம் நுனிநா அண்ணம் |
(9) |
க-து: | இதுவுமது. |
பொருள்: டகாரம் ணகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் நுனிநா நுனி அண்ணத்தைப் பொருந்தப்பிறக்கும். |
‘‘தத்தம் திரிபே சிறிய’’ என்றதனான் நாச்சிறிது உள்வளைதல் கொள்க. |
சூ. 92: | அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின |
(10) |
க-து: | இரண்டுமுதலாக இணைத்துக் கூறப்பெறும் எழுத்துக்கள் முயற்சியான் சிறிதுவேறுபடுமென மேல்புறனடை (சூ. 6) கூறினமையின் ஈண்டுக் கங-சஞ-டண என இணைத்துக் கூறியவற்றுள்ளும் அவ்வேறுபாடு உண்டெனக் கருதற்க. அவை வளியிசையின் வேறுபட்டு இரண்டாக நின்றனவன்றிப் பிறப்பிட முயற்சியான் ஒரு தன்மையவே எனப் புறனடை கூறுகின்றது. ஐயமகற்றுதல் எனினும் ஒக்கும். |
பொருள்: மேல்இரண்டிரண்டாகச் சேர்த்துக் கூறப்பெற்ற மூவிரண்டு எழுத்துக்களும், வினைக்கள முயற்சியான் திரிபுடையவை யல்ல; மேற்கூறியாங்கு மூவகைப்பிறப்பினவேயாம். தேற்றேகாரம் தொக்கது. |
வந்ததுகொண்டு வாராததுணர்த்தல் என்னும் உத்தியான், வல்லெழுத்துக்கட்கு நெஞ்சுவளியிசை உரியதென்று கொள்க. என்னை? வளியிசைமூன்றனுள் உயிரெழுத்துக்கள் ‘‘மிடற்றுப் |