நன்கு உறுதலும் ஒற்றலும் நெகிழ்ந்த வழி இனிது பிறவா தென்பது. தகரநகரங்களின் முயற்சித்திரிபு மிக நுண்ணியதாதலை உணர்க. |
சூ. 94: | அணரி நுனிநா அண்ணம் ஒற்ற |
| றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் |
(12) |
க-து: | மெய்களுள் றகரனகரங்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. அண்ணமும் நாவுமாகிய உறுப்புக்களின் அடிப்படையிற் பிறப்புவிதி கூறத் தொடங்கியமையின் நெடுங்கணக்குமுறை நோக்காது உறுப்பமைதி நோக்கித் தகரனகரங்களின் பின்னர் றகரனகரங்களின் முயற்சி கூறுகின்றார் எனஅறிக. |
பொருள்:றகரம் னகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் நாவின் நுனி (சிறிது வளைந்து) மேனோக்கி எழுந்து அசைந்து விரிந்து அண்ணத்தை நன்கு தொட்டு நிற்கப் பிறக்கும். |
அணருதல்=மேல்நோக்கி அசைந்து விரிதல் (அண்ணத்தை நோக்கிச் செல்லுதல் அணர்தலாயிற்று) மேல்நோக்கி எழுதல் இரண்டற்கும், அசைதல் றகரத்திற்கும் ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியாற் கொள்க. |
சூ. 95 : | நுனிநா அணரி அண்ணம் வருட |
| ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் |
(13) |
க-து: | மெய்களுள் ரகரழகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்:ரகரம் ழகரம் ஆகிய இரண்டு மெய் எழுத்துக்களும், நாவின் நுனி, மேல்நோக்கி அசைந்தெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும். |
‘‘தத்தம் திரிபே சிறிய’’ என்பதனான் ழகரத்திற்கு நாச்சிறிது உள்வளைதல் கொள்க. |
சூ. 96: | நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற |
| ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் |
| லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் |
(14) |
க-து : | லகரளகர மெய்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது. |
பொருள்: லகாரம் ளகாரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் முறையே நாவினது விளிம்பு அண்பல்லின் அடிப்பகுதியை நெருங்கி அவ்விடத்து அண்ணத்தைப் பொருந்தி நிற்கவும், வருடவும் பிறக்கும். |