நூன்மரபு137

நாநுனி அண்பல்முதலை உற்றபின் அஃது  அண்ணத்தை  ஒற்றுதற்கும்
வருடுதற்கும் இயையாதாகலின் ஒற்ற முயலும்  நிலையை  ‘‘உற’’  என்றார். அஃது விளக்குவர இருள் நீங்கிற்று என்பது போல நின்றது.
 

சூ. 97: 

இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்
(15)
 

க-து:

பகரமகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:பகரம்   மகரம்    ஆகிய    மெய்யெழுத்துக்கள்   கீழிதழ்
மேலிதழைப் பொருந்தப் பிறக்கும். செயவென் எச்சம் திரிந்து நின்றது.
 

சூ. 98: 

பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்

(16)
 

க-து: வகரத்திற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:வகரமெய்   மேற்பல்லின்   முற்பகுதியைக்   கீழ்இதழ்சிறிது
மடங்கிச் சென்று பொருந்தப்பிறக்கும்.
 

பல்இதழ் எனப்பொதுவில் நின்றவேனும்  ஏற்புழிக்கோடலான்  மேற்பல், கீழிதழ்  எனக்கொள்க . இதழ்  சிறிது  மடங்குதலும்  அதனானே கொள்க. இம்மூன்றினையும் இதழ்வழி மெய் எழுத்தென்பர்
மொழி நூலார்.
 

சூ. 99: 

அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை

கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் 
(17)
 

க-து : 

எஞ்சிநின்ற யகரமெய்க்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:யகரமெய்,     அண்ணத்தைச்     சேர்ந்த,   மிடற்றெழும்
வளியிசையானது விளிம்புற்று நிற்கும் அடிநாவினை நெருங்கிப்  பொருந்தப் பிறக்கும்.
 

அண்ணம் சேர்ந்த வளியிசை எனக்கூட்டுக.  ‘‘மிடற்றெழுந்த’’  என்பது இனஞ்சுட்டி   இயைபுநீக்கவந்த   அடைமொழி.   கண்ணுறுதல்   =   மிக
நெருங்குதல்.   கண்ணுற்று   அடைய   என்பதற்கு    அவாய்நிலையான்,
விளிம்புற்று நிற்கும் அடிநா என்பது செயப்படுபொருளாக வந்தது.
 

மெய்யெழுத்துக்கள்   செயலுறுப்புக்கள்    தொழிற்பட்ட   வழியல்லது
பிறவாமையான், மிடற்றெழுவளியிசையான் மட்டும்  பிறக்குமெனின்  அஃது மேற்கோள்    மலைவாம்.   வளியிசையான்  மட்டுமே  பிறப்பின்  அஃது
உயிரெழுத்தாவதல்லது மெய்யாகாதென அறிக.