சூ. 111 : | மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் |
| உரியவை உரிய புணர்நிலைச் சுட்டே |
(9) |
க-து : | இதுவுமது. |
பொருள்: வேற்றுமை முதலாய பொருள்படச் சொற்கள், தொக்குத் திரிந்து ஒருசொல்லாய் மருவி நிற்கும் சொற்களும், இடம்மாறித் திரிந்து நிற்கும் சொற்களும், புணரியல் நிலையைக் கருதுமிடத்துக் கவர்பொருளில்லாதனவாய் வருவனயாவும் மேற்கூறியாங்கு உரியவாகும். |
‘உரியவை உரிய’ என்றதனான் உரியவை அல்லாதனவும் உளவென்பது பெறப்படும். அவையாவன: இழிசினர் வழக்கும், பிழைபடு சொற்களும், கவர்பொருள்படுவனவுமாகும். |
எ-டு: சோணாடு, மலாடு, தெனாது, வடாது இவை மருஉமொழிகள். மீகண், முன்றில், நுனிநா, புறநகர் இவை மயங்கியல் மொழிகள். அருமந்தபிள்ளை என்பதுபோல்வன சான்றோர் வழக்கன்மையின் எடுத்துக்காட்டாதற்கு ஏலா என்க. இனி உரியவல்லாதன: வந்திச்சி, போச்சி, ஆகச்சே, தோப்பனார், தங்கச்சி, கல்லை என்றாற் போல்வனவாம். |
சூ. 112 : | வேற்றுமை குறித்த பொருள்மொழி நிலையும் |
| வேற்றுமை அல்வழிப் பொருள்மொழி நிலையும் |
| எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் |
| ஒழுக்கல் வலிய புணருங் காலை |
(10) |
க-து: | மேற்கூறிய பெயரும் தொழிலுமாகிய சொற்கள் புணருங்கால் வேற்றுமைப் பொருள்படவும், அல்வழிப்பொருள்படவும் புணரும் என்றும்; ஆண்டு எழுத்தும் சாரியையும் வரும் என்றும் கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய சொற்கள் வேற்றுமைப் பொருள் நிலைகுறித்த சொற்களும், வேற்றுமை வழியல்லாத (அல்வழிப்) பொருள்நிலை குறித்த சொற்களுமாய்ப் புணரும். அங்ஙனம் அவை இருவழியாகிப் புணருமிடத்து அவை எழுத்தும் சாரியையும் பெறுதலாகிய அவ் இருபண்பினொடு நடத்தலை வலிமையாக உடையனவாகும். |
மெய்பிறிதாதல் முதலிய திரிபுகள் நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியுமாகிய சொற்களின்கண் உறுப்பாகவே நிற்கும். அவ்வாறன்றி எழுத்தும் சாரியையுமாகிய இவை வேற்றுமையும் அல்வழியுமாகிய பொருள் புலப்பாட்டிற்குத் துணையாகவும் உருபு முதலாயவற்றை ஏற்கத் துணையாகவும் வருமாதலின் |