நூன்மரபு161

எ-டு:ஆனை (ஆ+இன்+ஐ=ஆனை) ஆவினை -ஆனொடு, ஆவினொடு
எனவரும்.  ஆவின்முன்   என்னாது   ஆவின்   இறுதி    என்றதனான்
நான்கனுருபிற்குக்  கெடாது,  ஆவிற்கு  எனவும்,  ஆறனுருபிற்குக் கெட்டு,
ஆனது எனவும் வருதல்  சிறப்பாமெனக் கொள்க. உருபு புணர்ச்சிக்கு என
விதந்து கூறாமல் பொதுப்படக்   கூறியதனான்  ஆன்கோடு, ஆவின்கோடு
எனவரும் பொருட்புணர்ச்சிக்கும் இவ்விதிகொள்க.
 

இனி,  ‘‘இன்னின்   இகரம்   மாவின்   இறுதி’’ எனவும் கொள்ளுமாறு
சூத்திரம் யாத்தமையான் மா என்னும் பெயர்க்கும் இவ்விதி கொள்க. எ-டு :
மானை-மாவினை   எனவும்   மானொடு - மாவினொடு   எனவும்  வரும்.
கெடலுமாம் என்னாது ‘உரித்துமாகும்’ என்றதனான் ஆனுக்கு,   ஆவினுக்கு
என உகரம் உடன் பெறுதலும் கொள்க.
 

சூ. 121 :

அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை

னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே

(19)
 
க-து :

இதுவுமது.
 

பொருள் :அளவுப்பெயராய்வரும்,குறித்துவரு கிளவியின் முதல்நிற்கும்
உயிரின் மேலிடத்ததாய் நிலைமொழியொடு நிற்கும் இன்சாரியையினது னகர
ஒற்று   றகரமாகிய    நிலைத்தாகும்.     இத்திரிபு  மயக்கநிலையானன்றி
மரபுநிலையான் வருதலின் ‘‘ஆகியநிலைத்தே’’ என்றார்.
 

எ-டு :பத்து + இன் + அகல் = பதிற்றகல்,   பதிற்றுழக்கு  எனவரும்.
இவை பண்புத்தொகை. அளவுப்பெயர்    என்னாது   அளவாகும்  மொழி
என்றதனான் எண்ணலளவைக்கண்ணும் இவ்விதிகொள்க. எ-டு:பதிற்றொன்று
- பதிற்றிரண்டு எனவரும். இவை உம்மைத்தொகை. ‘‘நிலைஇய உயிர்மிசை’’
என்றதனான் அளவுப்பெயரல்லாத உயிர்முதன்  மொழிக்கும்   சிறுபான்மை
இவ்விதிகொள்க. எ-டு: பதிற்றடுக்கு,  ஒன்பதிற்றெழுத்து  எனவரும். இவை
பண்புத்தொகை. இச்சாரியையின்  னகரம் குற்றொற்றாகலின் இரட்டியதெனக்
கொள்க. இடைக்காலத்தார் இற்று என்பதையே சாரியையாகக் கொண்டனர்.
 

சூ. 122 :

வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன்

அஃகான் நிற்றல் ஆகிய பண்பே

(20)
 
க-து :

நிறுத்தமுறையானே   ‘‘வற்று’’   என்னும்  சாரியையினது இயல்பு
கூறுகின்றது.  ‘வஃகான்   மெய்கட’  என்றதனான் வற்றுச்சாரியை
என்பது பெறப்பட்டது.