பொருள் :வற்று என்னும் சாரியை, சுட்டெழுத்தை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயரின் முன்னர் வகர உயிர்மெய்யுள் வகரமெய்கெட அதனை ஊர்ந்துநின்ற அகரஉயிர் மட்டும் நிற்றல் அதற்கு உளதாகிய பண்பாம். |
எ-டு :அவை + வற்று + ஐ = அவையற்றை எனவரும். இடைவந்த யகர ஒற்று உடம்படுமெய்யாகும். உருபிற்கென விதந்து கூறாமையான், அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு எனவும் வரும். |
சூ. 123 : | னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு |
(21) |
க-து : | னகார ஈற்றுச்சாரியைகட்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் :னகரஈற்றுச்சாரியை நான்கினும் உள்ள னகர ஒற்று, நான்கனுருபு வருமிடத்து றகர ஒற்றாகத் திரியும். |
எ-டு :ஆவிற்கு, விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு எனவரும். |
இவ்விதி னகர ஈற்றுச் சாரியை நான்கற்கும் உரியதாகலின்‘‘அளவாகும் மொழிமுதல்’’ என்பதன் பின்வையாமல் வற்றுச் சாரியையின் பின்வைத்தார். ஆண்டுவைப்பின் இவ்விதி ‘‘இன்’’ சாரியை ஒன்றற்கே செல்லுமாகலான் என்க. |
சூ. 124: | ஆனின் னகரமும் அதனோ ரற்றே |
| நாள்முதல் வரூஉம் வன்முதற் றொழிற்கே |
(22) |
க-து : | ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் திரியுமாறு கூறுகின்றது. |
பொருள் :நாட்பெயராகவரும் சொல்லிற்கும் வல்லெழுத்தை முதலாக உடைய தொழிற் சொற்களுக்கும் இடையே வரும் ஆன்சாரியையது னகர ஒற்றும் முற்கூறிய ஆன் சாரியை போல றகரமாகத் திரியும். |
எ-டு:பரணியாற்கொண்டான் - ஆதிரையாற்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். |
இனி, இன்சாரியையினது னகரஒற்று வல்லெழுத்து முதலாய பெயர், வினைகள் வரின் றகரமாகத்திரியும் என்னும் விதிபற்றிய சூத்திரம் இதற்கு முன்னமைந்திருத்தல் வேண்டும். என்னை? பனியிற்கொண்டான், வளியிற்கொண்டான், பறம்பிற்பாரி, குறும்பிற்கொற்றன் என்றாற்போல இன்சாரியை பயின்று |